விலங்களுக்கு இடையிலான நட்பை பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கும். எப்படி இதெல்லாம் நடக்கும் என நினைக்குமளவுக்கு அவற்றின் அன்பு பாசம் ஒன்று ஒன்று காட்டும். அப்படியான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதில் பூனை மற்றும் குரங்கு அளவில்லா பாசத்தை பொழிகிறது. அந்த வீடியோவில் குரங்கு ஒன்று நடந்து செல்கிறது. அந்த இடம் விலங்குகள் பூங்காவாக இருக்க வேண்டும். குரங்கு செல்லும் வழியில் பூனை ஒன்று ஜாலியாக படுத்திருக்கிறது. தூக்க மயக்கத்தில் இருக்கும் பூனை, திடீரென குரங்கு வருவதை பார்த்ததும் நெளிந்து கொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, குரங்கு திடீரென பூனையை அரவணைக்கிறது. பூனையும் குரங்கின் அரவணைப்பில் அசந்திருக்க, திடீரென நெற்றிப் பொட்டில் ஒரு கிஸ் ஒன்று கொடுக்கிறது குரங்கு. தோழமையின் அடையாளமாகவும், தீராத அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கும் அந்த முத்தம், பூனையை மதி மயங்க வைக்கிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. டிவிட்டரில் @AnimalBeingBro5 என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 



இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், அன்பு ஒன்று மட்டுமே உலகின் பொதுமறை. அதனை இந்த வீடியோவிலும் பார்க்க முடிகிறது என கூறியுள்ளார்.






இன்னொரு நெட்டிசன், குரங்குபோல் ஜாலியாக இருக்க வேண்டும், பார்ப்பவர்களுக்கு அன்பை அளவில்லாமல் காட்ட வேண்டும் என்றெல்லாம் தெரிவித்துள்ளார். பூனை மிகவும் அழகாக இருப்பதால், அதனை கட்டியணைக்காமல் குரங்கால் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ