வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் பஞ்சமில்லை. குரங்குகள் செய்யும் பல்வேறு குறும்புகள் பற்றிய வீடியோக்கள் தினமும் இணையத்தில் பகிரப்படுகின்றன. தற்போது குரங்கின் மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவில், ஒரு வயதான நபர் குரங்குக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. இது இணையத்தில் வெளியாகி பிரபலமடைந்துள்ளது. குரங்குக்கு உணவளித்தே ஆக வேண்டும் என்று எண்ணும் அவர் இறுதியில் மற்றொருவரின் உதவியுடன் அதை செய்து முடிக்கிறார். அவருடைய இரக்கச் செயல் மற்றவர்களிடம் கருணை காட்ட அனைவரையும் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் படிக்க | உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


சிவம் பாபட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த வீடியோ-வை வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகின்றது. ஒரு முதியவர் ஒரு குரங்குக்காக, அது சாப்பிட ரொட்டித் துண்டை வீசுவதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த நபர் தெருவில் நின்றுகொண்டிருக்க குரங்கு உயரத்தில் பால்கனியில் காணப்படுகின்றது. அந்த நபர், உணவை இரண்டு, மூன்று முறை தூக்கிப்போட்டு, அதை குரங்கிடம் அனுப்ப முயற்சிக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் குரங்கு வரை அது செல்லாமல் விழுந்துவிடுகிறது. 


பின்னர் குரங்கிடம் செல்லும் வகையில் உணவை வீசக்கூடிய ஓரு நபரிடம் முதியவர் உதவி கேட்கிறார். அவரும் அப்படியே செய்கிறார். இந்த முறை குரங்கு சரியாக உணவை பற்றிக்கொள்கிறது. பின் அதை குரங்கு சாப்பிடுகிறது. 


அற்புதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:


 



 


இந்த வீடியோவின் தலைப்பில், ‘கருணை உலகுக்கு உயிர் கொடுக்கிறது’ என பெயரிடப்பட்டுள்ளது. 


இணையத்தில் பகிரப்பட்ட பிறகு, இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகளும் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இந்த வீடியோ மனதை கவரும் வகையில் உள்ளது’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘உலகில் இது போன்றவர்களுக்கான தேவை உள்ளது’ என மற்றொருவர் எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | தலைக்கு தில்ல பாத்தியா..நடுரோட்டில் மாணவிகளிடம் இப்படியா செய்றது: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ