வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


மக்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்துடன் மிருகக்காட்சிசாலைகளுக்கு சென்று மிருகங்களை கண்டு ரசிப்பதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் சிலர் விலங்குகள் மற்றும் பறவைகளை கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இது ஒரு தவறான பழக்கமாகும். 


விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதால் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணம் தவறானது என சில நேரங்களில் விலங்குகள் புரியவைக்கின்றன. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள் 


சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒராங்குட்டானை தூரத்தில் இருந்து ஒருவர் கிண்டல் செய்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் அடுத்த நொடியே ஒராங்குட்டான் அவரைப் பிடித்து தன்னை நோக்கி இழுக்கத் தொடங்குகிறது. ஒராங்குட்டானின் இந்த செயலால் அந்த நபர் மிகவும் அதிர்ச்சி அடைந்து பயத்தில் பதற்றமடைகிறார். ஒராங்குட்டான் அந்த நபரை விடுவிக்கும் எண்ணத்தில் இல்லை என்பது இந்த வீடியோவை பார்த்தால் தெரிகிறது. 


சின்னாபின்னமாக்கிய ஒராங்குட்டான்


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் தனது நண்பர்களுடன் மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்திருப்பதை காண முடிகிறது. அவர் ஒராங்குட்டானின் கூண்டுக்கு அருகில் சென்று அதை பார்த்து சில சைகைகளை செய்கிறார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஒராங்குட்டான் கையை நீட்டி அவரது ஆடைகளைப் பிடிக்கிறது. ஒராங்குட்டான் அந்த நபரை மெதுவாக தன் பக்கம் இழுக்கிறது.


அந்த நபர் ஒராங்குட்டானின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல வழிகளில் முயற்சி செய்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் தோல்வியடைகின்றன. சிறிது நேரத்தில் சிம்பன்சி அவரை முழுமையாகப் பிடித்துக்கொள்கிறது. 


சினம் கொண்ட ஒராங்குட்டானின் வீடியோவை இங்கே காணலாம்: