வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கில் பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்களில் சில நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளன. சமீபத்தில் மனதை பதற வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை கண்ட அனைவரும் அச்சத்தின் உச்சியில் உள்ளனர். இந்த வீடியோ வெகுவாக வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோ மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டுள்ளது. 


வீடியோவில், ஒரு நபர் மிருகக்காட்சி சாலையில், சிங்கத்தின் கூண்டில் கையை வைத்து பெரும் தவறு செய்வதை காண முடிகின்றது. இதற்கு பின் நடந்த விஷயத்தை நினைத்துகூட பார்க்க முடியாது. 


மேலும் படிக்க | சண்டை வேண்டாம்.. வாடா போய்டலாம்! சமாதானப்புறாவாக மாறி நாய்! 


கையை கடித்துக் குதறிய சிங்கம் 


ஒரு நபர் உயிரியல் பூங்காவை பார்வையிட சென்றிருக்கிறார். அப்போது கூண்டில் ஒரு சிங்கத்தைப் பார்க்கிறார். சிறிதும் யோசிக்காமல் கூண்டுக்குள் கையை விட்டு விடுகிரார். ஆனால் சிங்கத்திற்கு அவரது செய்கை சிறிதும் பிடிக்கவில்லை என்பது அதன் முக பாவத்திலிருந்தே தெரிகிறது. அது ஓடி வந்து மனிதனின் கையை பிடித்து இழுக்கிறது. அந்த நபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவி கேட்கத் தொடங்குகிறார். வலி தாங்க முடியாமல் கத்துகிறார்.


நபரின் கையை கடித்துக் குதறிய சிங்கம்: திக் திக் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



நபரின் கையை சிங்கம் கடித்துக்கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் ஆடிப்போகிறார்கள். ஆனால், சிலரோ அதைப் பற்றி கவலைப்படாமல், நடப்பதை மொபைலில் வீடியோ எடுக்கிறார்கள். எனினும், அந்த நபரை காப்பாற்ற யாருக்கும் தைரியம் வரவில்லை. யாரும் அவர் அருகில் செல்லவில்லை என்பது வீடியோவை பார்த்தால் தெரிகிறது. 


கடைசியில் அந்த நபர் பெரிய முயற்சிக்கு பிறகு, தனது கையை சிங்கத்தின் பிடியில் இருந்து வெளியே இழுத்து விடுகிறார். பயங்கர வலியுடன் அவர் கூண்டை விட்டு தூரமாக வருவதை வீடியோவில் காண முடிகின்றது. 


இந்த வீடியொ hunting.vids என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘விலங்குகளை சீண்டினால் சிக்கல்தான்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘பாவம் அந்த நபர்.. அவர் கை என்னவாயிற்றோ’ என மற்றொருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | பாம்பை விழுங்கிய பெண்: கனவு, கற்பனை, அனைத்தையும் மிஞ்சும் சம்பவம், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ