வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலர் கார், பைக் அல்லது சைக்கிள்களை மிகவும் வேடிக்கையாக ஓட்டுகிறார்கள். முன்னால் இருந்து லாரி அல்லது பஸ் வந்தாலும் கவலைப்படுவதில்லை. இவர்கள் தங்கள் ஓட்டும் திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் சமாளிக்க முடியும் என்ற அசாத்திய தைரியம் இவர்களுக்கு இருக்கும். இருப்பினும், சுயநினைவின்றி வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. 


வேடிக்கையாக சாலையில் சைக்கிள் ஓட்டும் ஒரு முதியவரின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. திடீரென அவருக்கு முன்னால் ஒரு பேருந்து வருகிறது. பேருந்து முதியவர் மீது மோதி விடுமோ என அனைவரும் பதபதைப்போடு இருக்கும்போது, முதியவர் அசால்டாய் அங்கிருந்து பத்திரமாக சென்று விடுகிறார். 


மேலும் படிக்க | பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது: குப்புற விழுந்த குட்டி யானை, வைரல் வீடியோ


பேருந்திலிருந்து தப்பித்த முதியவர்


வைரலாகும் வீடியோவில், முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது பேருந்து முன்னால் வருகிறது. அந்த காட்சியை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு பீதி கிளம்புகிறது. எனினும், முதியவர் துளியும் பதட்டம் அடைந்ததாகத் தெரியவில்லை. அவர் படு கூலாக சைக்கிளை ஓட்டி அசால்டாய் அதை கடந்து செல்கிறார். 


கூல் தாத்தாவின் சூப்பர் வீடியோவை இங்கே காணலாம்: 



காட்சியை நம்ப முடியவில்லை


பேருந்தின் முன்பக்கத்திலிருந்து முதியவர் அடிபடாமல் அசால்டாய் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்லும் விதத்தை யாராலும் நம்ப முடியவில்லை. இந்த வீடியோ ghantaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் தலைப்பில், 'வாழ்க்கையை பார்த்து பயம் இல்லை' என எழுதப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. பயனர்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். முதியவரின் தைரியத்தையும் கூல் பாணியையும் பலர் பாராட்டுகிறார்கள். எனினும் இப்படிபட்ட ரிஸ்கான முயற்சிகள் ஆபத்தாக முடியலாம், இப்படி செய்வது நல்லதல்ல என பலர் எச்சரித்துள்ளனர்.


தினமும் உலகில் பல விபத்துகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க பலரும் பல முயற்சிகளை எடுத்தாலும், விபத்துகளை முழுமையாக முடக்குவது சாத்தியப்படவில்லை. ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகள் பற்றிய செய்திகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து தலைப்புச் செய்திகளாகின்றன. உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாத சில விபத்துகளிலும் சிலர் உயிர் பிழைக்கின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன.


மேலும் படிக்க | ‘ஷ்ஷ்..அழாத’ தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் குரங்கு: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ