வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


உயிரியல் பூங்காவில் அழிந்து வரும் வகையை சேர்ந்த குரங்கு ஒன்று புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளை கொதிப்படைய செய்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள சைகோன் மிருகக்காட்சிசாலை மற்றும் தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்ட கிளிப் இது. இந்த வீடியோவில் ஒரு ஆண் ஒராங்குட்டான் தனது கூண்டில அமர்ந்து சிகரெட் பிடித்து புகையை ஊதுவதை காண முடிகின்றது. மனிதர்களைப் போலவே அந்த குரங்கும் தனது விரல்களில் சிகரெட்டைப் பிடித்து புகையை இழுக்கும் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 


மேலும் படிக்க | 'எவ்வளவு நக்கினாலும் சுவையே தெரியலையே’: இதயம் கவர்ந்த நாயின் வைரல் வீடியோ


ஓராங்குட்டான் புகை பிடிப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இது மனதுக்கு வேதனை அளிக்கின்றது. விலங்குகளுக்கு கற்றுத்தர மனிதர்களிடம் பல விஷயங்கள் இருந்தாலும், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பழக்கம் அந்த குரங்கை தொற்றிக்கொண்டது வருத்தமாக உள்ளது.


மிருகக்காட்சிசாலை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஒராங்குட்டான் போர்னியோவில் இருந்து வியட்நாமுக்கு வந்தது. உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு செய்தி தொடர்பாளர் இந்த வீடியோ காட்சியை தெளிவுபடுத்தினார். மிருகக்காட்சி சாலைக்கு வந்த ஒருவர் அந்த  சிகரெட்டை கூண்டுக்குள் வீசியதாக கூறப்படுகிறது.


"மக்கள் பெரும்பாலும் விலங்குகளின் கூண்டுகளில் பொருட்களை வீசுகிறார்கள். மேலும் மக்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்து ஒராங்குட்டான் இந்த பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்கிறது" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். 


தம் அடித்து ஃபிலிம் காட்டும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: 



மிருகக்காட்சிசாலையில் இருந்து தெளிவுபடுத்தப்பட்ட போதிலும், வைரலான வீடியோ உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மனம் உடைந்து கோபமடைந்து ட்விட்டரில் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். 


“அப்பாவி குரங்கு, கூண்டில் அடைபட்ட நிலையில் மனிதப் பண்புகளை நகலெடுக்கிறது. இது வேடிக்கையானதாகத் தெரியவில்லை, இந்த புத்திசாலித்தனமான விலங்குகளுக்கு நாம் காட்டும் உதாரணங்கள் வருத்தமாக இருக்கிறது” என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார். 


மற்றொரு பயனர், "உயிரியல் பூங்காக்களை மூடிவிடலாம். இவற்றுக்கான அர்த்தமே போய் விட்டது" என எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | Thrilling Viral Video: ரிங் மாஸ்டரை பின்னி பெடலெடுக்கும் சிங்கம்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR