வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகளுக்கு இணையத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு நபர் பாம்பை காப்பாற்றுவதைக் காண முடிந்தது. உண்மையில், அவர் பாம்பை மட்டும் காப்பாற்றவில்லை. பாம்பு கடிக்காமல் அங்கிருந்த மக்களையும் காப்பாற்றியுள்ளார். ஆனால், இந்த வீடியோ நாம் பார்த்து வியக்கும் வகையில் உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பொதுவாக, பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதால், மனிதர்களும், பிற உயிரினங்களும் பாம்புகளின் அருகில் செல்ல விரும்புவதில்லை. பாம்புகளை கண்டால், தங்களை காப்பாற்றிக்கொள்ள அந்த இடத்திலிருந்து செல்ல முயற்சிப்பவர்கள்தான் பெரும்பாலானோர். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி பாம்புகள் வந்தால், பல நேரங்களில், சிலர் அவற்றைக் கொன்று விடுகின்றனர். அதே சமயம் சிலர் உயிரை பணயம் வைத்து பாம்புகளை மீட்டு பாதுகாப்பான இடங்களில் விடும் சம்பவங்களும் ஏராளமாக நடந்துள்ளன. 


மேலும் படிக்க | குரங்கு இழுத்துச்சென்ற குழந்தை....பிழைத்ததா? பதற வைக்கும் வைரல் வீடியோ


பாம்பை மீட்கும் மனிதன்



சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில், அப்படிப்பட்ட ஒரு நபரை காண முடிகின்றது. இதில் ஒரு நபர் எந்த வித அச்சமும் இல்லமல் பாம்பை பாதுகாப்பாக மீட்பதை பார்க்கிறோம். ​​அந்த நபர் மிக எளிதாக பாம்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கைகளால் அதன் வாயை மூடி அதை பிடித்துக்கொள்கிறார். எனினும், வீடியோவின் துவக்கத்தில் அவர் பாம்பை பிடிக்க முயற்சிக்கும் போது, அது மிக ஆக்ரோஷமாக அவரை கொத்த வருவதையும் காண முடிகின்றது. ஆனாலும், அவர் எந்த அச்சமும் இன்றி தான் நினைத்ததை செய்து முடிக்கிறார். 


கண் இமைக்கும் நேரத்தில் மீட்பு


வீடியோவில், செங்கற் குவியலில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவதை காண முடிகின்றது. அதைச் சுற்றி அப்பகுதி மக்கள் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பாம்பை மீட்க ஒரு நபர் முன்வருகிறார். அவர் செய்யும் முயற்சியின் போது, பாம்பு கோபத்துடன் அவரை நோக்கி கொத்த வருகிறது, தன்னிடம் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கிறது. ஆனால், அச்சப்படாத அந்த நபர், பாம்பின் தலை மேல் கை வைத்து தடவிக்கொடுத்து, அதை மெதுவாக பிடித்து பாதுக்காப்பான இடத்தில் சேர்க்கிறார்.


இந்த வீடியோ ட்விட்டரில் @NarendraNeer007 என்ற பக்கத்தில் பகிரப்படுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ஹெல்மெட் ..கூலிங் கிளாஸூடன் ரைடிங் புறப்பட்ட நாய்; வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ