உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹீமா தாஸ் தங்கம் வென்றதற்கு ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்லாந்தில் நடக்கும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருககான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஹீமா தாஸ். 


இவர் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 18 வயதுடைய ஹீமா தாஸ். 


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் இந்தாண்டு ஏப்ரலில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 51.32 விநாடியில் கடந்து 6வது இடத்தைப் பிடித்தார் ஹீமா. அப்போது 20 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய சாதனையை அவர் புரிந்தார். அதன்பிறகு குவஹாத்தியில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் 51.13 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் ஹீமா. 



இதையடுத்து, இவருக்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.