இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரெய்னாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வீட்டினில் ரெய்னாவிற்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா. இன்று இவர் தனது 31-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். 
ஜூலை 2005-ல், 19 வது வயதில் இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இடது கை, நடுத்தர ஒழுங்கு மட்டையாளர். மிகவும் ஆக்கப்பூர்வமான வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர். 


எந்த காயமும் இல்லாமல் 100 போட்டிகளுக் மேல் விளையாடியுள்ளார். ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளராகவும், சிறந்த மட்டையாளர்களி ஒருவராகவும் திகழ்கிறார்.


இத்தனை பெருமைகளை கொண்டவரான இவர், இன்று தனது பிறந்தநாளினை சச்சின் வீட்டு விருந்துடன் கொண்டாடியுள்ளார்.


இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.