'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட நாயகி ராகுல்பீரீத் சிங்-ன் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடையறத் தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர் ராகுல் ப்ரீத். எனினும் கடந்தாண்டு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலமே இவர் தமிழகத்தில் பிரபலமானார். தெலுங்கு திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள ராகுல் ப்ரீத் மூன்று முறை ப்லிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்.


தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் NGK, கார்த்தியின் தேவ் படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் தெலுங்கு திரையுலக நடிகர் NTR வாழ்க்கை வரலாற்று திரைப்படதிதல் நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை தொடர்ந்து நெட்டீசன்கள் ராகுல் பீரீத் ஏற்கும் வேடம் ஸ்ரீதேவியா இல்லை ஸ்ரீரெட்டியா? என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இந்த தகவலை தெரிவத்துள்ள ராகுல் ப்ரீத், விஷமிகள் பதிவிடும் கருத்து, புகைப்படங்களுக்கு ரசிகர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.


இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடிகை திரிஷா-வின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!