வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல  கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. ஆனால் இது வழக்கமாக பகிரப்படும் வீடியோக்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. பாம்பு வாயை அகலத் திறந்து கொண்டு கொட்டாவி விடுவதை இந்த வீடியோவில் நாம் காண முடிகின்றது. இதை பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது.


"நீங்கள் எப்போதாவது ஒரு பாம்பு கொட்டாவி விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்ற தலைப்புடன் டெரிஃபையிங் நேச்சர் @TerrifyingNatur என்ற ட்விட்டர் பக்கம் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.


மேலும் படிக்க | கண்ணில் எச்சில் தேய்த்து அழும் குழந்தை: கியூட் வைரல் வீடியோ


பாம்பு பயங்கரமாக கொட்டாவி விடும் வீடியோவை இங்கே காணலாம்: 



இப்படிப்பட்ட காட்சிகள் மிக அரிதானவை. அத்தனை சுலபமாக இவற்றை காண முடியாது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 


பாம்புகள் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இங்கே காணலாம்: 


- பாம்புகள் கூச்ச சுபாவமுள்ளவை மற்றும் இரகசியமானவை. மேலும் அவை ஆக்ரோஷமானவை அல்ல என்பதால், தாமாக சண்டையிடவோ அல்லது யாரையும் கடிக்கவோ செய்யாது. தேவைப்படும்போது வேட்டையாடவோ அல்லது தங்களை தற்காத்துக் கொள்ளவோ மட்டுமே அவை தாக்குகின்றன.


- இனச்சேர்க்கை காலத்தைத் தவிர, பாம்புகள் பெரும்பாலும் தனிமையில் இருக்கும்.


- சுமார் 3,000 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் சுமார் 600 விஷம் கொண்டவை, ஆனால் சுமார் 200 மட்டுமே மனிதர்களுக்கு குறிப்பிடத்தக்க காயத்தை ஏற்படுத்தும் அல்லது கொல்லும் திறன் கொண்டவை.


- பாம்பு விஷம் இரையை அசையமுடியாமல் செய்கிறது. பின்னர் பாம்பு இரையின் சதையை உடைப்பதால், செரிமானம் எளிதாகிறது. 


- பாம்புகள் நாக்கால் வாசனைகளை கண்டறியும். எந்த திசையில் இருந்து வாசனை வருகிறது என்று கூட அவற்றால் அறிய முடியும்.


- பாம்புகள் வெளிப்புற ஆதாரங்களை (குறிப்பாக, சூரியன்) நம்பியிருக்கின்றன. வெப்பம் இல்லாமல், பாம்புகளுக்கு தங்கள் உணவை ஜீரணிக்க அல்லது நகர்த்த போதுமான ஆற்றல் இருப்பதில்லை.


- பாம்புகளுக்கு கூர்மையான கண்பார்வை கிடையாது. அவை இயற்கையை சார்ந்து வாழ்கின்றன. கூர்மையான கண் பார்வை இல்லாததால் அவை எப்போதும் சிறிய அச்சத்திலும் இருக்கின்றன. 


இந்த அற்புதமான ஊர்வனவற்றைப் பற்றி நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஆகையால் அவற்றைப் பார்த்து பயப்படுவதற்கும் அவற்றை வெறுப்பதற்கும் பதிலாக, நம்முடைய இந்த உலகம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்பதை உணர்ந்து அவற்றுடன் இணக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். 


பாம்புகள் பற்றிய தகவல்கள் petaindia.com இலிருந்து எடுக்கப்பட்டவை.


மேலும் படிக்க | சீறிப்பாய்ந்த காளை.. கம்பத்தில் ஏறிய நபர்: பிறகு என்னதான் ஆச்சு? வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ