வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா தாலுக்காவில் உள்ள ஹோச கொப்பல் கிராமத்தில் வீட்டின் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹாசன் மாவட்டம் ஹோலே நரசிபுரா அருகே உள்ள ஹோச கொப்பல் கிராமத்தை சேர்ந்தவர் தேவேகவுடா. இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் நேற்று இரவு வீட்டு வளாகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது. வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை உறங்கிக் கொண்டிருந்த நாயை தூக்கி சென்றது.


சிறுத்தை நாயை தூக்கி சென்ற காட்சிகள் தேவேகவுடா வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளன. 


மேலும் படிக்க | ஆட்டுக்குட்டிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் கோமாதாவின் பசு அன்பு 


சிறுத்தை நாயை தூக்கிச்செல்லும் அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்: