இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இருவரும் கடந்த டிச., 21-ஆம் நாள் இத்தாலியில் உள்ள டஸ்கன் ரிசார்டில் திருமணம் செய்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இத்தம்பதியருக்கு இரண்டு இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி வரும் 21-ஆம் தேதி டெல்லியிலும், 26-ஆம் தேதி மும்பையிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


இதனிடையே புதுமணத் தம்பதியினர் தேனிலவுக்காக சென்றுள்ள செல்பி படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் முன்னதாக பதிவிட்டார். இந்தப் புகைப்படம் வெளியான 2 மணி நேரத்திற்குள் மில்லியன் லைக்குகளை பெற்றது.


இந்நிலையில் தற்போது இந்த புகைப்படத்தினை எடுத்து, போட்டோஷாப் மூலம் இவர்கள் இருவரும் பாக்கிஸ்தானில் உலா வருவது போல வடிவமைத்து இணையத்தை அதிர வைக்கின்றனர் சில நெட்டிசன்கள்...


அந்த புகைப்படங்களை நீங்கள் பார்க்க வேண்டாமா?







Pic Courtesy: Green Shirts