Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் வைரல் ஆகும் சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்தால், நம்மால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இப்படிப்பட்ட செயல் மிகவும் ஆபத்தானது என்பதையும், இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.


ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரண்டு குழந்தைகள் சவாரி செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. மலைப்பாம்பு சாவகாசமாக ஊர்ந்து சென்று கொண்டு இருக்கின்றது. அதன் மீது இரு குழந்தைகள் சவாரி செய்துகொண்டிருக்கின்றனர். 


மலைப்பாம்புகள் பெரிய விலங்குகளையே அப்படியே விழுங்கும் திறன் கொண்டவை. மேலும் இவை இரையை மிக சுலபமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும். அப்படிப்பட்ட மலைப்பாம்பின் மீது இரு குழந்தைகள் இப்படி பயம் இல்லாமல் விளையாடுவது மிகுந்த பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றது.


மேலும் படிக்க | பளார்!! ஒரே அடி... பூனைக்கு பயந்து ஓடிய பாம்பு: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ


மலைப்பாம்பு படும் பாட்டை இந்த வீடியோவில் காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @BapuDaLadla என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 7,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


குழந்தைகள் மகிழ்ச்சியாக காணப்பட்டாலும், அதற்கு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்றே தோன்றுகிறது. இதையே இணையவாசிகளும் தங்கள் கமெண்டுகளில் கூறியுள்ளார்கள். பல ஆன்லைன் பயனர்கள் குழந்தைகளின் தைரியத்தைக் கண்டு அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி குழந்தைகளை விளையாடவிட்டு வீடியோ எடுத்த பெற்றோரையும் சிலர் கண்டித்துள்ளனர்.


‘ஏன் இந்த வீடியோ மோகம்? இது தேவைதானா?’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘குழந்தைகளுக்கு இது போன்ற விஷயங்களில் உள்ள ஆபத்தை புரிய வைக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் வேறொரு நாள் வேறொரு இடத்தில் ஆபத்தில் சிக்கிக்கொள்ளக் கூடும்’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘காட்டு விலங்குகளை இப்படி படுத்தி எடுப்பதால்தான் அவை மனிதர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்துகின்றன’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.


இந்த வீடியோ இந்தோனேசியாவில் படமாக்கப்பட்டது என்றும் அது ஓரளவு பழமையான வீடியோ என்றும் கூறப்படுகின்றது. இருப்பினும் இது தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகின்றது. 


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | குடை போல கொம்பை பரந்து விரிந்து வச்சிருக்கும் இந்த விலங்கை பார்த்திருக்கீங்களா? - வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ