பளார்!! ஒரே அடி... பூனைக்கு பயந்து ஓடிய பாம்பு: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ

Viral Video: பாம்புனா படையே நடுங்குமாமே... கலியுகத்துல ஒரு பூனை கூட நடுங்கல. இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வைரல் வீடியோவை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 26, 2024, 12:22 PM IST
  • இந்த வீடியோ யூடியூபில் Short clips என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending Photos

பளார்!! ஒரே அடி... பூனைக்கு பயந்து ஓடிய பாம்பு: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ title=

Viral Video: பாம்பென்றால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் ஒரு பூனை கூட பாம்பை பார்த்து நடுங்கவில்லை!! ஆம், இது உண்மைதான். இதற்கு சாட்சியாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. பூனை நடுங்காதது, பாம்பை பார்த்து அச்சப்படாமல் இருப்பது மட்டும் இந்த வீடியோவின் சிறப்பல்ல. யாரும் யோசித்துக்கூட பார்க்காத வண்ணம் இது மற்றொரு துணிச்சலான செயலையும் செய்கிறது. பூனையின் அந்த செயலை பற்றி இங்கே காணலாம்.

பூனையும் பாம்பும்m எதிர் எதிரே சந்திக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாம்பு மெதுவாக பூனையை நோக்கி செல்கிறது. அது ஒரு கருப்பு நிற நாகப்பாம்பு. அதை காணவே பயங்கரமாக உள்ளது. தனது இடத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டிருக்கும் பூனை பாம்பு வருவதை பார்த்து அலர்ட்டாகி எழுந்து நிற்கிறது. பாம்பு அதன் அருகில் வந்து படம் எடுத்து ஆடுகிறது.

‘பாம்பு ப்ரோ... பயம் வரல’

ஆனால் ‘பாம்பு ப்ரோ... பயம் வரல’ என்று கூறுவதை போல, பூனை அதை அசால்டாக பார்க்கிறது. கடுப்பான பாம்பு அதை கொத்த அதன் அருகில் செல்கிறது. பூனை பளார் என பாம்பை அடிக்கிறது. பாம்பு பல முறை பூனையை கொத்த முயற்சி செய்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் பூனை அதை நன்றாக அடிக்கிறது. இந்த பூனையை தான் ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொண்ட பாம்பு அங்கிருந்து ஓடியே விடுகிறது.

மேலும் படிக்க | பாலைவனத்தில் கானல்நீரா? இவ்வளவு அழகான பாலைவனத்தில் வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வைரல் வீடியோ!

படம் எடுத்தாடிய பாம்பை பளார் என அடித்த பூனையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ யூடியூபில் Short clips என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

இந்த வீடியோ இணையவாசிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘பூனையின் துணிச்சலை பாராட்ட வேண்டும்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘பாம்பு உயிருக்கு பயந்து ஓடியே விட்டது’ என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘எதிர்த்து நின்றால் யாரையும் வெல்லலாம் என்பதற்கு இந்த பூனை ஒரு எடுத்துக்காட்டு’ என ஒருவர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | பாம்பு கடித்ததால் விஷமாக மாறியதா தக்காளி? வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News