நீர் அருவியாக கொட்டுவதைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் நகரத்தில் வாழ்பவர்களுக்கு அரிது என்பதால், அருவியைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். நீர்வீழ்ச்சிகளை ரசிப்பது மட்டுமல்ல, அதைப் பார்த்ததும் குளிக்க வேண்டும் என்ற ஆவல் எழாமல் இருக்குமா? அருவியை கீழிருந்து பார்த்தால் நீர் எங்கிருந்து விழுகிறது என்று தெரியாமல் இருந்தால், அந்த நீர் வீழ்ச்சிகளை ஆகாய கங்கை என்று சொல்வார்கள். அற்புதமான நீர்வீழ்ச்சியின் பேரழகை நேரில் சென்று ரசிக்க வேண்டும் என்ற ஏக்க பலருக்கும் இருக்கும். அந்த ஏக்கம் சில சமயத்தில் ஏக்கமாகவே இருந்து விடுவது நல்லது தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று சிந்திக்கிறீர்களா? சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவைப் பார்த்தால் அருவியின் அழகுக்கு பின் நிறைந்திருக்கும் ஆபத்து, பேராபத்து என்பது புரியும். வீடியோவை பார்த்தால், ஆரம்பத்தில் ரசிக்கலாம்... ஆனால், முடிவில்?


வைரல் வீடியோ...