ரஜினி - விஜய்சேதுபதி நடிப்பில் உறுவாகியுள்ள பேட்ட திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் 'நான் தான் ரஜினி-யின் வில்லன்' என நடிகர் விஜய் சேதுபதி தில்லாக கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 


இப்படத்தின் இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோக்களை எற்கனவே வெளியிட்டுள்ள படக்குழுவினர், நேற்றைய தினம் சென்னை தனியார் கல்லூரியில் படத்தின் பாடல்களை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பங்கேற்றது.



நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ரஜினியை புகழ்ந்த வேலையில், அளவாக பேசிய விஜய்சேதுபதி அனைவது கவனத்தையும் ஈர்த்தார். தனக்கே உரிய பானியில் பேசிய அவரின் பேச்சுக்கு அறங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.


ரஜினி-க்கு வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா என பலர் ஒதுங்கி வரும்நிலையில் இப்படத்தில் ரஜினியின் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி இந்நிகழ்ச்சில் பேசிசுகையில்... "பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆளாக முடியும். நான் இப்போது ரஜினியின் வில்லன்" என தில்லாக கூறினார். இந்த வார்த்தைகள் மேலும் அவரை உறுதியானவராக வெளிப்படுத்தியது. 


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் போங்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.