வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினமும் உலகில் பல விபத்துகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க பலரும் பல முயற்சிகளை எடுத்தாலும், விபத்துகளை முழுமையாக முடக்குவது சாத்தியப்படவில்லை. ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகள் பற்றிய செய்திகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து தலைப்புச் செய்திகளாகின்றன. உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாத சில விபத்துகளிலும் சிலர் உயிர் பிழைக்கின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. விபத்துகள் பற்றிய ஆபத்தான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. பல விபத்துகளின் வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். 


மேலும் படிக்க | ‘இப்படியா அடிச்சிப்பாங்க?’: பெண்களின் சண்டையால் வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 


தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காண்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க தவறவில்லை. இதை பார்த்தால் உங்கள் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிடும். உண்மையில், இந்த வீடியோவில், ஒரு குழந்தைக்கு வரும் ஆபத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். 


இந்த வீடியோவில் சில குழந்தைகள் சாலையில் பேருந்து முன் நிற்பதைக் காண முடிகின்றது. அப்போது நடக்கும் ஒரு விஷயம் அங்கிருந்தவர்களையும் வீடியோவை காண்பவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. 


இது போன்ற ஒரு வீடியோவை பார்த்திருக்க முடியாது


இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. சில குழந்தைகள் பேருந்திலிருந்து இறங்கி சாலையைக் கடக்க நிற்கிறார்கள். இதில் ஒரு குழந்தை திடீரென்று சாலையைக் கடக்க நடு சாலையில் ஓடத் தொடங்குகிறது. இதற்குப் பிறகு நடக்கும் விஷயம் மனதை பதபதைக்க வைக்கிறது.  


மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



நூலிழையில் பிழைத்த குழந்தை


குழந்தை சாலையில் ஓடும்போது, ​​எதிரே ஒரு லாரி அதிவேகமாக வருகிறது. இந்த நிலையில் அனைவருமே  அதிர்ச்சி அடைகின்றனர். குழந்தையை பிடிக்க அதன் பின்னால் ஓடிய நபரும் அப்படியே நின்று விடுகிறார். ஆனால் குழந்தையின் அதிர்ஷ்டம் அபாரமாக இருந்துள்ளது. லாரி டிரைவர் சரியான நேரத்தில் வேகத்தை குறைத்து பிரேக் போட்டு விட்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போகிறார்கள். இதைப் பார்த்த பலரும் பல வித கமெண்டுகளை அளித்த வண்ணம் உள்ளனர். 


வீடியோ வைரலாகி வருகிறது


மக்கள் (சமூக ஊடக பயனர்கள்) இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதாரமாக உள்ள இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகிறது. 8 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ஒரு மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கானோர் இதை லைக் செய்து ரீட்வீட் செய்துள்ளனர். சிறு குழந்தைகள் தனியாக சாலையை கடக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | கெத்து காட்டும் சிங்கத்தை துண்டைக் காணோம் துணையைக் காணோம் என விரட்டும் ராஜநாகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ