நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. வடமாநிலங்களில் வெப்ப அலைகளே வீச தொடங்கியிருக்கின்றன. கட்டுகடங்காமல் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கும் வெப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியிருக்கியுள்ளது. வெயிலில் வேலை செய்யும் மக்கள், உடல் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்தந்த மாநில அரசுகளும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், கொளுத்துகிற வெயிலில் அடுப்பு இல்லாமல் சூரிய ஒளியிலேயே ஒருவர் ஆம்லெட் சமைத்திருக்கும் வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆட்டை முழுசா விழுங்கி அவதிப்பட்ட மலைப்பாம்பு..அப்புறம் என்னாச்சி: வைரல் வீடியோ


Puchu Babu என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில் தோசை கல்லுடன் மொட்டை மாடிக்கு செல்கிறார். அங்கு வெயில் கடுமையாக காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தன் கையில் இருக்கும் தோசைக் கல்லில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றுகிறார். வெயிலின் கடுமையில் தோசைக் கல்லில் உற்றிய முட்டை சிறிது நேரத்தில் ஆம்லெட்டாகிறது. அந்தளவுக்கு வெயிலின் கடுமை இருக்கிறது. பின்னர் அந்த ஆம்லெட்டை எடுத்து அவர் சாப்பிடுகிறார். இந்த வீடியோ இப்போது 2.2 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ளனர்.