வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்து, சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு நன்மதிப்புகளை பற்றி புரிய வைத்து நல்லவர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இப்படி பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் சமூகத்தில் நல்ல குடிமக்களாகிறார்கள்.


இது மனிதர்களில் பொதுவாக நடக்கும் விஷயம்தான். ஆனால், தேவை இல்லாத சில்மிஷம் செய்ததற்காக ஒரு விலங்கு தனது குட்டியை அடித்து திருத்துவதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? இது விசித்திரமாக இருக்கும். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. 


மிருகக்காட்சிசாலைக்கு வருபவர்கள் மீது சிம்பன்சி குட்டி ஒன்று கற்களை வீசுவதை இந்த வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. ஆனால், அதன் தாய்க்கு அது பிடிக்கவில்லை. ஒரு பெரிய குச்சியை எடுத்து, குறும்பு செய்யும் குட்டியை அடிப்பது போல அது பாசாங்கு செய்கிறது. இந்த வகையில் இப்படி மனிதர்கள் மீது கற்களை வீசுவது தவறு என்பதை அது தன் குட்டிக்கு புரிய வைக்கிறது. 


மிக அரிதான அந்த வீடியோவை இங்கே காணலாம்:



மேலும் படிக்க | நாய்க்குட்டியை கிட்னாப் செய்த குசும்புக்கார குரங்கு: வீடியோ வைரல்


இந்த வீடியோவை ட்விட்டரில் @susantananda3 என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதில் அவர், “பார்வையாளர்கள் மீது கற்களை வீசும் குட்டியை அடிக்கும் தாய் சிம்பன்சி... அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். நன்நடத்தையை கற்பிக்கும் பெற்றோர்கள்” என எழுதியுள்ளார். 


இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் வந்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். “இது ஆச்சரியமாக இருக்கிறது! ” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். "இது மிகவும் அழகாக இருக்கிறது. அம்மா.. மனித குலமாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி. ஒரே மாதிரி தான் இருக்கிறார்.. குழந்தை தப்பு செய்தால் தண்டிக்க தவறுவதில்லை" என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | கடவுளே! பொது இடத்தில் காதலியுடன் காதலன் செய்த வைரல் செயல்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ