Viral Video Tamil Latest : புறா எல்லாம் விலங்குகளை வேட்டையாடுமா? என்ற கேட்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் ஒரு நிமிடம் அவர்களுக்கு நெஞ்சே வெடித்துவிடும். ஏனென்றால், இந்த வீடியோவில் இருக்கும் புறா முயலையே வேட்டையாடி உயிரோடு முழுங்கியிருக்கிறது. சில விஷயங்களை கேட்பவர்களுக்கு விநோதமாக தோன்றலாம், ஆனால் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கே விநோதமாக இருக்கும். ஆம், கடற்புறா ஒன்று முயலை உயிரோடு வேட்டையாடி விழுங்குகிறது. கூடவே இன்னும் இரண்டு கடற் புறாக்கள் இருக்கின்றன. கடலில் பொதுவாக மீன்களை வேட்டையாடி வாழும் கடற்புறா இப்போது நிலத்திலும் வேட்டையாட தொடங்கிவிட்டது. கடலின் மேற்பரப்பில் நீந்தி விளையாடி மீன்களை வேட்டையாடி பிடிப்பதில் கடல்புறாக்களுக்கு கை வந்த கலை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, கடல் சுறாக்கள் மற்றும் முதலைகளுக்கும் இவை இரையாகும்  நிகழ்வும் நடக்கும். ஆனால், கடல் புறா முயலை வேட்டையாடுவது என்பது பலரும் கேள்விப்பட்டிராத செய்தி. வீடியோவாக இந்த காட்சி பதிவு செய்யப்படவில்லை என்றால் பலரும் கடல்புறா முயலை வேட்டையாடும் என வாய்வார்த்தையாக சொன்னால் அதனை நம்பியிருக்க மாட்டார்கள். ஏன், இந்த வீடியோவை எடுத்தவராலேயே நம்ப முடியவில்லை. வியப்பின் உச்சத்தில் இருந்தபடியே தான் கடல் புறாவின் வேட்டை வீடியோவை பதிவு செய்திருக்கிறார். நேச்சர் இஸ் ப்ரூட்டல் என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ பார்த்த பலராலும் புறாவின் இந்த வேட்டையை நம்ப முடியவில்லை.  வீட்டருகே அல்லது கோயிலுக்கு செல்லும்போது அங்கு பறக்கும் புறாக்களையே அதிசயமாக பார்த்து பழகியவர்களுக்கு இந்த கடல் புறாவின் வீடியோ அதிர்ச்சியாக இருந்தாலும் வியப்பதற்கில்லை. 


மேலும் படிக்க | பட்டு எப்படி உருவாகிறது தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்!


ஏனென்றால் புறாவின் இந்த கோணத்தையெல்லாம் பார்த்திருக்க மாட்டார்கள், கற்பனையில்கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். இது ஒருபுறம் இருக்க அதுவும் ஒரு பறவையினம் தானே. அதுவும் உணவுக்காக வேட்டையாடும். கழுகு வேட்டையாடுவதை பலரும் நேரடியாக பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அவை குடியிருப்பு பகுதிகளுக்குள்ளேயே புகுந்து கோழிகளையும், கோழிக் குஞ்சுகளையும் லாவகமாக கணப்பொழுதில் கால்களில் தூக்கிச் சென்றுவிடும். இதனை பார்த்திருப்பவர்கள் நிச்சயம் புறாவின் வீடியோவை பார்த்திருக்க மாட்டார்கள்.


கடல் புறா முயலை வேட்டையாடும் அதிசய வீடியோ : 




இந்த வைரல் வீடியோ இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஏறத்தாழ எல்லோருமே எங்களால் இந்த காட்சியை நம்பவே முடியவில்லை என்றே கூறியிருக்கிறார்கள். புறா வேட்டையாடுமா? என்று ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்திருக்கிறார்கள். ஒருசிலர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் இவை என்ற சுற்றுச்சூழல் மாற்றத்தின் விளைவுகளை ஒரு கவலையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் சிலர் இதை குறித்து உலக நாடுகள் கவனத்தில் கொண்டு காலநிலை மாற்றத்துக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என அறிந்து, உயிரினங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க | முயல் - ஆமை ஓட்டப்பந்தயம்: கதையல்ல நிஜம்... ஜெயிச்சது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ