மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வேலைக்கு வராமல் இருந்த ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தில் ஹோஷங்காபாத் என்ற இடத்தில் அமைத்துள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை விடாமல், கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார். 
ஊழியரை அடிக்கும் காட்சி வீடியோ இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், கட்டி வைத்து அடிக்கிறார். உரிமையாளரின் நண்பரும் உடன் இருக்கிறார். அந்த வீடியோவில் அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை என்று கூறுகிறார். 


எனினும் அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், தொடர்ந்து அடிக்கிறார். தற்போது ஊழியரை தாக்கியது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.