காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைக்கு, குரங்கு ஒன்று மசாஜ் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைக்கு, குரங்கு ஒன்று மசாஜ் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உத்திரபிரதேசம் பிலிபிட் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் திவேதி என்பவர், மனஅழுத்தத்தை போக்க குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்த போது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலையில் மசாஜ் செய்து கொண்டிருந்தது.



தலையில் பேன் பார்ப்பது போல் இருந்த இந்த காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது காவலர் இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். ஒரு வேலை இதற்காகவே இந்த குரங்கை அவர் காவல் நிலையத்தில் வளர்த்து வருகிறாரோ.....? என்ற எண்ணமும் பலரின் சிந்தனையில் கேள்வியாக எழுந்துள்ளது.