பல படங்களில் கிராமத்து கோவில்களின் பூசாரி ஆகவும் ’கருப்பன் குசும்புக்காரன்’ என்னும் வசனத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி.  இவர் சிவகார்திக்கேயன் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவசிக்கு தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். இவரது புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணயத்தில் வைரலாகி வந்தது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாத வகையில் உள்ளார். இவரது இந்த தோற்றத்தை பார்த்த பலர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



 


ALSO READ | சினிமாவில் இதுவரை புகைபிடிக்கும் காட்சிகளை செய்யாத தமிழ் நடிகர்கள்; யார் அவர்கள்?


கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும் இதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது அவரது மகன் திரையுலகினரின் உதவியை நாடி உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 


சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தில் பஞ்சாயத்து காட்சியில் கம்பீரமாக இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசிய நடிகர் தவசி, தற்போது உடல் மெலிந்து பார்க்கவே மிகவும் சோகமாக காட்சி அளிக்கிறார். 


இந்நிலையில் தற்போது அவரது சிகிச்சைக்கு திமுக எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் உதவி செய்து வருகிறார். புற்று நோயால் நடிகர் தவசி பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவியும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியும் செய்துள்ளனர்.



 


ALSO READ | பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரபல தொகுப்பாளருக்கு விஜய்சேதுபதி உதவி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR