வைரல் வீடியோ: பல விதமான வேடிக்கையான மற்றும் வித்தியாசமான வீடியோக்களின் தளமாக இணையதளம் விளங்குகிறது. இங்கு நாம் பல வித சுவாரசியமான வீடியோக்களை காண்கிறோம். பொதுவாக நாம் காண முடியாத பல விசித்திர காட்சிகளும் நிகழ்வுகளும் இவற்றில் நமக்கு காணக்கிடைக்கின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நம் வாயில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை. இவற்றின் மூலம் நாம் நமது மனதின் இறுக்கங்களை மறந்து சிரிக்கிறோம், சிந்திக்கிறோம். அப்படி ஒரு வீடியோவை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயதான தம்பதிகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் பார்ப்பதற்கு எப்போதும் மனதை நெகிழ வைக்கும். யாரென்று அறியாத இருவர் ஒன்றாக சேர்ந்து, வாழ்க்கை பயணத்தை நடத்தி, முதுமை வரை துணை இருந்து, முதுமையில் ஒருவருக்கு ஒருவர் ஊன்றுகோலாய் இருந்து வாழ்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 


இந்த வீடியோவில் இந்த ஜோடிக்கு இடையிலான அன்பையும் அக்கறையையும் காண முடிகின்றது. இது வெளியான உடனேயே வைரலாகி இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது. வீடியோவில், ஒரு வயதான ஜோடி தரையில் அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. அந்த பாட்டி, தனது கணவருக்கு அன்புடன் உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார். இந்த வீடியோவை ஐஏஎஸ் டாக்டர் சுமிதா மிஸ்ரா ட்விட்டரில் மனதைக் கவரும் தலைப்புடன் பகிர்ந்துள்ளார். பின்னணி இசை இந்த காட்சியின் நெகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. 


மேலும் படிக்க | காதலன் கையை பிடித்து காதலி செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல் 


கணவனுக்கு ஆசையாக உணவளிக்கும் பாட்டியின் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வயதான தம்பதியினருக்கு இடையேயான உணர்வுபூர்வமான பிணைப்பைப் பார்க்க பயனர்களுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தங்களுக்கென இப்படி அன்பை பொழியும் ஒருவரை பெற்றிருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களது வாழ்க்கை அமைதியாக கழிந்துவிடும்.


இந்த வயதான தம்பதிகளை போல இந்த காலத்தில் கணவன் மனைவியின் ஜோடியை பார்ப்பது மிகவும் அரிதாகும். தொட்டதெற்கெல்லாம் சண்டை, புரிதல் இல்லாமை என்று இருக்கும் இந்த உலகில் இத்தனை காலம் இணை பிரியாமல் வாழும் இந்த ஜோடியை பார்த்தால் மனம் மகிழ்கிறது. 


இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ 612K-க்கும் அதிகமான வியூஸ்களையும் 5000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. இதற்கு இணையவாசிகள் பலவித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். ஒரு பயனர் ஐஏஎஸ் டாக்டர் சுமிதா மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்து, “அன்பைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மேடம். பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம்” என்று எழுதினார். 


மற்றொரு பயனர், "இதுதான் உண்மையான அன்பு, பாசம்.." என்று எழுதியுள்ளார். "இது முற்றிலும் உண்மை. காதலுக்கு வயதில்லை. அதனால் பகையை காட்ட முடியாது. அதற்கு வயது வரம்பு கிடையாது. அன்பின் சக்தி என்னவென்றால், அது அன்பின் பெருங்கடலை உருவாக்கும், ஆனால், வெறுப்பு அதன் ஆழத்தில் இறந்துவிடும்.’ என அழகாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


‘இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைத்துணை அனைவருக்கும் தேவை. அப்படி இருந்தால், அந்த நபர் ஒரு அதிர்ஷ்டசாலி’ என ஒருவர் எழுதியுள்ளார்.


மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ