தன்னை பலசாலி என நிரூபிக்க சிலர் செய்யும் வேடிக்கையான சம்பவங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. ஆனால், அதனை எதிர்கொள்வதற்கு முன்பு விளைவுகளை பற்றி அவர்கள் யோசிக்காமல் செய்யும் செயல் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். யார் சொல்லியும் அவர்கள் கேட்க தயாராக இருப்பதில்லை. ஒருவேளை யாராவது சொன்னால் கூட, தங்களுக்கு இந்த உலகமே தெரியும் என்கிற ரீதியில் அவர்களுடைய அணுகுமுறை இருக்கும். காலம் தான் இருக்கிறதே, ஒருவருக்கு சரியான பாடத்தை புகட்ட. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


மேலே சொன்னபடி, தன்னை ஒரு பலசாலி என நினைத்துக்கொண்டு ஒரு இளைஞர் செய்யும் வேடிக்கையான வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் கையால் கட்டையை உடைக்க முற்படுகிறார் அந்த இளைஞர். அவருக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும், நாமெல்லாம் அத்தகைய பலசாலி எல்லாம் இல்லை என்று. 



ஆனால், அவர் அப்படி நினைக்காமல், மரக்கட்டையை உடைத்தே தீருவேன் என்ற முனைப்பில் அதனை கையால் உடைக்க முயல்கிறார். அப்படி செய்யும் கட்டை உடையவில்லை, மாறாக அவருடைய கை தான் பெரும் சேதாரத்தை சந்திக்கிறது. வலியால் துடிக்கும் அந்த இளைஞர் அங்கும் இங்கும் ஓடுகிறார். இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


மேலும் படிக்க | Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ