குறிப்பிட்ட நாட்களுக்கு இடைவெளியில் கிரகங்கள் இடம்மாறிச் செல்லும் நிலையில், இப்போது சுக்கிரன் சிம்ம ராசிக்கு சென்றிருக்கிறார். ஜூலை 7 ஆம் தேதி இந்த பெயர்ச்சி நடந்திருக்கிறது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை சுக்கிரன் இதே நிலையில் இருப்பார் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் 3 ராசிகளுக்கு திடீர் பணவரவு மற்றும் புகழ் எல்லாம் தேடி வரும். தீராத பிரச்சனைகள் எல்லாம் இந்த காலத்திற்குள் முடிவடைய வாய்ப்பிருக்கிறது. சுக்கிரன் கிரகத்தை பொறுத்தவரை ஆடம்பரம், செல்வம், அழகு ஆகியவற்றுக்கு அதிபதி என்பதால், இது சார்ந்த தொழில் மற்றும் துறைகளில் இருப்பவர்களுக்கு இரட்டை ஜாக்பாட் என்று கூட சொல்லாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 100 ஆண்டுக்கு பிறகு 3 ராசிகளின் தலைவிதி மாறும்! முக்கோண ராஜயோகத்தால் பண வரவு


சிம்மத்தில் சுக்கிரன்- 3 ராசிகளுக்கு ஜாக்பாட்


கும்பம்


சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் இந்த ராசிக்காரர்கள் பண வரவு அமோகமாக இருக்கும். இந்த ராசிக்கு ஏழாவது வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நடந்திருக்கிறது.  ஆனால்,  கும்ப ராசிக்கு அதன் நான்காவது மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் தான். அதனால், நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறலாம். இதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உடல் சுகமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் ஆன்மீகத்துடன் இணைந்திருப்பீர்கள். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலையும் அதிகரிக்கும். பணம் கிடைக்க புதிய வாய்ப்புகள் அமையும்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரித்துள்ளார். மிதுன ராசிக்கு ஐந்தாவது மற்றும் 12வது வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். குழந்தைகளிடம் இருந்து நீங்கள் நல்ல செய்தியைப் பெறலாம். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். அதேசமயம், நீங்கள் சேமித்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் தொழிலதிபர்களுக்கும் சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு பண பலன்களும் கிடைக்கும்.


துலாம்


இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்களின் வருமானத்துக்கு உகந்த வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சி இருக்கிறது. அதனால் உங்கள் வருமானம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் தேடி வரும். அதே சமயம் அந்த நபரின் பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். பணம் பெற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் பழைய முதலீடுகள் நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் முன்னேற்றம் நிச்சயம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூட்டு சேர்ந்து தொடங்கும் தொழில் சாதகமாக அமையும்.


மேலும் படிக்க | நவம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு சனியின் அருளால் அபரிமிதமான பலன் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ