500 ஆண்டுக்கு பின் உருவாகும் ராஜயோகத்தின் பலன்: வேத ஜோதிடத்தின் படி, பஞ்ச திவ்ய யோகம் பிப்ரவரி 9 ஆம் தேதி அதாவது தை அமாவாசை தினம் உருவானது. இந்த ராஜயோகம் தற்போது 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது. மகர ராசியில் புதாதித்ய யோகம், நான்கு கிரகங்கள் மகர ராசியில் சேர்ந்த சதுர்கிரக யோகம், மகாலட்சுமி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் உருவானது. உண்மையில் புதனும் சூரியனும் மகர ராசியில் ஒன்றாக இருப்பதால் புதாதித்ய யோகமும், மகர ராசியில் செவ்வாய் மற்றும் சூரியன் பெயர்ச்சி அடைந்துள்ளதால் ஆதித்ய மங்கள யோகமும் உருவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில் மகர ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனுடன் மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சி அடைவதால் மகாலட்சுமி யோகம் உருவாகிறது. இந்த யோகங்களின் பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும், ஆனால் 3 ராசிக்காரர்கள் மட்டும் அதீத நன்மைகளை பெறுவார்கள். இந்நிலையில் இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்...


மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இன்று முதல் இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை... கோடீஸ்வர யோகம் ஆரம்பம்


மேஷம் (Aries Zodiac Sign): ஐந்து ராஜயோகங்கள் அதாவது பஞ்ச திவ்ய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். உங்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றமும், வெற்றிக்கான வாய்ப்புகளும் தேடிவரும். இது தவிர, குடும்ப வாழ்க்கையும் சிறப்பான பலன்களை பெற்றிடலாம். அலுவலக உத்தியோகத்தில் பணிபுரியும் மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் பெறலாம். தொழிலதிபராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வியாபாரம் விரிவடையும்.


ரிஷபம் (Taurus Zodiac Sign): பஞ்ச ராஜயோகம் உருவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். ஏனெனில் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்தில் 5 திவ்ய யோகம் உருவாகப் போகிறது. இந்த அற்புத யோகங்களால், உங்களுக்கு தந்தை மற்றும் மூதாதையர்களின் சொத்து அல்லது நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.  மேலும் வேலை, வியாபாரம் செய்யும் ரிஷப ராசிக்காரர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். தந்தை மற்றும் மூதாதையர் சொத்துக்கள் மூலம் நீங்கள் நிதி ஆதாயத்தை பெறலாம். நற்பெயர் நான்கு மடங்கு உயரும். மத நிகழ்வில் பங்கேற்கலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம்.


கடகம் (Cancer Zodiac Sign): பஞ்ச ராஜயோகம் உருவதால் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதேபோல் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் முயன்ற வணிக ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் சிற்ப்பான விட்டுக் கொடுத்தல் இருக்கும். அதுமட்டுமின்றி, வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தத்தை பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை.. இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ