சுக்கிரன் சூரியன் சேர்க்கை பலன்கள் 2024: ஜோதிட சாஸ்திரப்படி வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். அதேசமயம் மார்ச் 7 ஆம் தேதி, செல்வத்தை அளிப்பவராகிய சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக கும்ப ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் செல்வ செழிப்பைப் பெருகக்கூடிய மூன்று ராசிகள் உள்ளன. மேலும் சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆசிர்வாதத்தால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் எவை என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துலாம் (Libra Zodiac Sign): விருச்சிக ராசியினருக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் அற்புதமான பலனைத் தரும். ஏனெனில் இந்த சேர்க்கை உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். செல்வாக்கு மிக்க நபர்களை சந்திப்பீர்கள், உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். கிரகங்களின் சுப சேர்க்கையால், துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், உங்கள் காதல் உறவு தொடர்ந்தால், அதில் நீங்கள் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனத்தில் சீட்டு கிடைக்கும்.


மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராகு சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளால் பொற்காலம்


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த சேர்க்கை விருச்சிக ராசியின் நான்காம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். வசதிகளும் அதிகரிக்கும். வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம். ரியல் எஸ்டேட், சொத்து, மருத்துவம் மற்றும் ஹோட்டல் தொடர்பான பணிகளில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்கள் தாயுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். தாயாரின் உதவியால் பணம் கிடைக்கும்.

மகரம் (Capricorn Zodiac Sign): சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த சேர்க்கை பணம் மற்றும் பேச்சு வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். அதேபோல் உங்களது பேச்சினால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், வருமான ஆதாரங்களை பெறுவீர்கள், பொருளாதார நிலைமை முன்பை விட மேம்படும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள்.


மேலும் படிக்க | 500 ஆண்டுக்குப் பின் உருவாகும் கேதார ராஜயோகம், இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ