சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்ற சுழற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கின்றது. இதனுடன் ராசி மாற்றத்தால் பல்வேறு யோகங்களும் உருவாகின்றன. நான்கு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 13 அன்று, சுக்கிரன் விருச்சிக ராசியில் நுழையப் போகிறார். இந்த ராசி மாற்றத்தால் அஷ்டலக்ஷ்மி ராஜ யோகம் உருவாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஷ்டலக்ஷ்மி ராஜயோகம் என்பது பல வித நல்ல பலன்களையும் செல்வச்செழிப்பையும் அள்ளித்தரும் யோகமாகும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் உருவாகவுள்ள அஷ்டலக்ஷ்மி ராஜயோகத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கவுள்ளன. இந்த ராஜயோகத்தால் வாழ்க்கையிலும் தொழிலிலும் வேகமான முன்னேற்றங்கள் ஏற்படும். அந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: 


சுக்கிரனின் மாற்றத்தால் ஏற்படும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.எனினும், 3 ராசிகளில் அதிகப்படியான நல்ல பலன்கள் தென்படும். இவர்களுக்கு இந்த நேரத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 


1. மகரம்: 


அஷ்டலக்ஷ்மி ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மகர ராசியில் இருந்து 11ம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இது ஜோதிடத்தில் வருமானம் மற்றும் பண வரவுக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. இதனால் வியாபாரத்தில் உடனடி லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில், கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யப்படும் முதலீடுகள் வலுவான லாபத்தை அளிக்கும். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் முன்னர் செய்த பழைய முதலீடுகளிலிருந்து நல்ல வருமானத்தையும் பெறலாம்.


மேலும் படிக்க | நவம்பர் 13 முதல் பணக்காரராகப் போகும் 4 ராசிகள்! உங்கள் ராசி என்ன?


கும்பம்: 


அஷ்டலக்ஷ்மி ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக பலனளிக்கும். இந்த யோகம் உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் உருவாகப் போகிறது. இது வணிகம் மற்றும் வேலைக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், இந்த காலகட்டத்தில் உங்களது நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் வருமான ஆதாரங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்படக்கூடும். 
அலுவலக வேலைகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். அலுவலகத்தில் கிடைக்கும் பாராட்டுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் புதிய வேலையைத் தொடங்க விரும்புபவர்களும் அதை இப்போது தொடங்கலாம். இந்த காலத்தில் குழந்தைகள் மூலம் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். 


மீனம்: 


அஷ்டலக்ஷ்மி ராஜயோகம் மீன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அள்ளித் தரும். இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் பத்தாம் ஸ்தானத்தில் உருவாகிறது. இந்த ஸ்தானம் அதிர்ஷ்ட ஸ்தானமாகவும் வெளிநாட்டுப் பயணத்துக்கான ஸ்தானமாகவும் கருதப்படுகின்றது. 


இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக வேறு மாநிலம் அல்லது வெளியூர் பயணமும் செல்லக்கூடும். இந்த பயணத்தால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண விஷயத்திலும் இந்த நேரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெற்றிகளை குவிக்க மேஷம், விருச்சிக ராசிகள் செய்ய வேண்டிய ‘சில’ பரிகாரங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ