வெற்றிகளை குவிக்க மேஷம், விருச்சிக ராசிகள் செய்ய வேண்டிய ‘சில’ பரிகாரங்கள்!

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதி. ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால், வேலையில், தொழிலில் வெற்றி, செல்வம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 8, 2022, 08:55 PM IST
  • ஜாதகத்தில் செவ்வாய் வலுவான நிலையில் இருந்தால், வேலையில், தொழிலில் வெற்றி கிடைக்கும்.
  • செவ்வாய் கிரகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்.
  • செவ்வாய் கிரகத்தின் கோபத்தை தணிக்க பவள ரத்தினம் அணிவது மிகவும் நன்மை பயக்கும்.
வெற்றிகளை குவிக்க மேஷம், விருச்சிக ராசிகள் செய்ய வேண்டிய ‘சில’ பரிகாரங்கள்! title=

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதி. ஜோதிடத்தில், செவ்வாய் வலிமை மற்றும் தைரியத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமான நிலையில் இருப்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் நீங்க பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. இதைச் செய்வதால் வேலையில், தொழிலில் வெற்றி, செல்வம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

செவ்வாய் கிரகத்தின் அருளைப் பெற, அனுமனை வழிபடவும். வீட்டில் அல்லது ஹனுமான் கோவிலுக்குச் சென்று சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அனுமனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஹனுமான் சாலீசா சொல்வதும் நன்மை பயக்கும். செவ்வாய் கிரகத்தின் கோபத்தை தணிக்க பவள ரத்தினம் அணிவது மிகவும் நன்மை பயக்கும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமை தோறும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஹனுமனை வழிபட வேண்டும். சிவப்பு ஆடை அணிந்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்பதும் மிகவும் நன்மை பயக்கும். காலை அல்லது மாலையில், சுத்தமான நெய் விளக்கை ஏற்றி சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்து வணங்கவும்.

மேலும் படிக்க | சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

செவ்வாயின் அதிபதி முருகன், என்பதால், செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வணங்கினாலும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும் என கூறப்படுகிறது. கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரம் பருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பதும் நல்லது.

செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்வதும், தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும். 

மேலும், நீங்கள் வசிக்கும் இடத்தில் வேப்ப மரக்கன்றை நடுவது நல்ல பலன் தரும். இந்த செடி மரமாகும் வரை கவனித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சற்று பெரிய செடியை நட்டு 43 நாட்கள் பராமரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தினால் உண்டான பிரச்சனை தீரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம் ஏற்படலாம்!

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News