ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தன்மை, குணங்கள், தீமைகள் மற்றும் எதிர்காலம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.  அந்த வகையில்,  12 ராசிகளில் 3 ராசிக்காரர்கள் மிகவும் கருணை மனம் படைத்தவர்கள், அனைவரையும் நேசிக்கும் குணம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் இந்த உலகில் உள்ள எவரையும் வெறுக்க மாட்டார்கள்.இந்த ராசிக்காரர்கள் மனதை புண்புடுத்தும் பழைய விஷயங்களை மறந்துவிடுவார்கள், தனக்கு மன வருத்தத்தை கொடுத்தவர்களை எளிதில் மன்னிப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்கள். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் யாருடனும் தானாக சென்று தகராறு செய்ய மாட்டார்கள். அவர்களின் இயல்புக்கு ஏற்ப, அவர்கள் சிறிய விஷயங்களை முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் நல்லெண்ணத்துடன் அன்புடன் பழகும் குணம் கொண்ட அந்த 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


கடகம்


கடகம் சந்திரனால் ஆளப்படுகிறது. ஜோதிடத்தில், சந்திரன் மனம் மற்றும் குண நலன்களின் காரணியாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்புடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் அன்புக்குரியவர்களிடம் அதிக அக்கறை செலுத்துவார்கள். இதனுடன் உறவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது தவிர மன்னிக்கும் குணமும் இந்த ராசியை சேர்ந்தவர்களிடம் உள்ளது. இதனால் இவர்கள் அனைவரையும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.


மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 


சிம்மம்


சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். இந்த ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் தெளிவாக வெள்ளை மனதுடன் காணும் தன்மை படைத்தவர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் மனதை வாட்டும் பழைய விஷயங்களை நினைத்து பார்க்காமல் இருப்பதே அவர்களின் சிறந்த குணம் எனலாம். அன்பினால் உலகை வெல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். பழைய விஷயங்களை மறந்துவிட்டு, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறார்கள்.  மன்னிக்கும் குணமும் அவர்களுக்கு உண்டு. பிறரின் குற்றங்களை மன்னிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.


மீனம்


மீன ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். இந்த ராசியை சேர்ந்தவர்கள் விளைவை பற்றி யோசிக்காமல் பேசி விடுவார்கள். இதனால், அவர்களின் வார்த்தைகள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு கடுமையாக தோன்றினாலும், அவை இதயத்திலிருந்து வந்த வார்த்தைகளாக, உள்நோக்கம் எதுவும் இல்லாத வார்த்தைகளாக  இருக்கும். இவர்கள் அனைவரையும் நேசிக்கும் குணம் கொண்டவர்களாக மேலும், இவர்களுக்கு யார் மீதும் பொறாமையோ, வெறுப்போ கிடையாது. இது தவிர, எதையும் மறந்து முன்னேறிச் செல்வதையே இவர்கள் நம்புகிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ