கிரகங்களின் இளவரசன் புதன், நாளை அதாவது 2023 அன்று வக்ர பெயர்ச்சியடையப் போகிறார். புதனின் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், அவரின் வக்ர கதி இயக்க சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமையில் அசுப பலன்களைத் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை, 2023 ஆகஸ்ட் 24அன்று, சிம்ம ராசியில் புதன் நுழைய உள்ளது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் கவலையை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.


கடகம்புதன் பெயர்ச்சியால், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். உங்களின் கவனக்குறைவால் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு கைகூடாமல் போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்மையால் மனம் கலங்கலாம்.


மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்


சிம்மம்: வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் நெட்வொர்க் விரிவடையும், இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். தொழிலுக்கு நல்ல நேரம். ஆனால், உங்களுக்கு மனதில் கவலை இருந்துக் கொண்டே இருக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது, அதை தொழிலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் சாமர்த்தியம் தான்


மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சற்று கவலையைத் தரும். பொருளாதார நிலையில் பெரிய பலன் இருக்கும்சுணக்கம் காணப்படும். வருமானம் அதிகரிக்கும். திடீரென பணம் முடங்கிப் போகலாம். மீன  ராசிக்காரர்களுக்கு தாயுடனான உறவு மேம்படும்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் சுப பலன்களைத் தராது. பணம் கைக்கு வந்தாலும், அது நிலைக்காது. நேரம் கழியும். தொழிலில் சாதனைகள் எதையும் நிகழ்த்த முடியாது.


மேலும் படிக்க | சனியின் நட்சத்திர மாற்றம், அடுத்த 55 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு செல்வ செழிப்பு


புதன் ஞானிகளில் மிகப் பெரியவராகக் கருதப்படுகிறார். தனது பக்தர்களுக்கு ஞானம் மற்றும் செல்வம் முதலியவற்றை அருளுகிறார். பக்தர்களின் மனதில் இருந்து தீய எண்ணங்களை நீக்குகிறார். ஞானிகளில் முதன்மையானவர் என்று கருதப்படும் புதன் பகவான், அழகு மற்றும் ஒற்றுமை காரணமாக அவர் விஷ்ணு ரூபி என்று கருதப்படுகிறார்.


புதன் கிழமைகளில் புதன் பகவானை வழிபடுவது, வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்குவது, குழந்தை பேற்றைத் தரும் புதன், சொத்தை பெறவும் அருளாசி தருவார். புதன்கிழமைகளில் புத பகவானை வழிபட்டு வந்தால் சங்கடங்கள் நீங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ