ராஜ யோகம்: கிரகங்களின் பெயர்ச்சி அல்லது இரு கிரகங்களின் இணைப்பின் காரணமாக 12 ராசிகளின் வாழ்விலும் சுப மற்றும் அசுப விளைவுகள் காணப்படுகின்றன. ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தால், சிம்மத்தில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. சிம்ம ராசியில் ஏற்கனவே புதன் கிரகம் அமர்ந்துள்ளது. இதனால் இங்கு புத ஆதித்ய யோகம் உருவாகிறது. சிம்மத்தில் இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருச்சிகம்:


ஜோதிட சாஸ்திரப்படி ஆகஸ்ட் 21 வரை சிம்மத்தில் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகும். இது வேலை மற்றும் வியாபாரத்தின் இடமாக உள்ளது. 


இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்கள் லாபம் அடைவீர்கள். வியாபாரம் பெருகும். இந்த நேரத்தில் ஏற்படும் புதிய வணிக உறவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் மரகதம் அணிவது நன்மை தரும்.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம், கேட்டது கிடைக்கும் 


துலாம்:


துலா ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் 11 ஆம் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த ஸ்தானம் வருமானம் மற்றும் லாபத்தின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. புதிய வழிகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். 


இந்த காலகட்டத்தில் நீங்கள் வணிகத்தில் முதலீடு செய்யலாம். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் சொத்து மற்றும் வாகனம் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம். இந்த முடிவுகள் உங்களுக்கு வெற்றியை அளிக்கும். இந்த நேரத்தில் டர்க்கைஸ் அணிவது நன்மை பயக்கும்.


சிம்மம்:


ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிறப்பு வழிகளில் பணம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. புத ஆதித்ய யோகத்தால் பொருளாதார நிலை மேம்படும். உடல் வலிமையும் உண்டாகும். பணம் வருவதற்கான பல புதிய வழிகள் திறக்கப்படும். 


பணி இடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். மதிப்பும் கௌரவமும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் வியாபாரிகளுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் லாபத்தை ஈட்டித் தரும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கிரகங்களின் பெயர்ச்சி பலன்களும் ஷட்பலத்தின் தாக்கமும்! செவ்வாய் பெயர்ச்சி இன்று 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ