Mercury Transit Effects: ஜோதிடத்தில் புதனுக்கு தனி இடம் உண்டு. புதன், புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்புணர்வு ஆகியவற்றிற்கு காரகர் என்று கூறப்படுகிறது.  ஜூலை 19ம் தேதியன்று புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சியாவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் என்றாலும், சில ராசிகளுக்கு பாதிப்புகளும் உண்டு. இந்நிலையில், புதன் கிரக பெயர்ச்சியினால் ஏற்படும் கெடுபலன்களை தவிர்க்க செய்ய வேண்டிய சில பாரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும், தன்னுடைய அறிவாற்றலின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு  வெற்றிகளை குவித்து விடும் ஆற்றல் இருக்கும். ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருக்கும் ஒருவர் எந்த பிரச்சனையையும் நேர்மறைச் சிந்தனையுடன் அணுகுவார்கள். தோல்விகளை கண்டு மனம் தளராமல், அனுபவங்கள் மூலம் வாழ்க்கைக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டு, தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். 


புதன் கிரகத்தை வலுவாகக் கொண்ட ஜாதகருக்கு, பேச்சின் மூலம் மக்களைக் கவரும் சக்தி இருக்கும். வேலை, தொழில் இரண்டிலும் திறமையினால் வெற்றிக் கொடியை நாட்டுவார். ஆனால் ஜாதகத்தில் புதன் வலுவிழந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், சில பரிகாரங்களின் (Astro Remedies) உதவியுடன் புதன் கிரகத்தை வலுவடையச் செய்வதால்,  மகிழ்ச்சியடைந்து புத பகவான் சுப பலன்களை அள்ளித் தருவார்.


புதன் கிரகம் வலுப்பெற செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்:


1.  பசுவிற்கு தீவனம் கொடுப்பதினால் புண்ணியம் கிடைப்பதோடு, புத கிரகம் வலுப்பெறும்.


2.  திருநங்கைகளை கண்டால், அவர்களை கேலி செய்யமால், அவர்கள் மனதை புண்படுத்தமால் அவர்களை பணம் கொடுத்து  அல்லது உதவு செய்யுங்கள். தவறுதலாகக் கூட அவர்கள் மனதை நோகடிக்காதீர்கள். அவர்களை கோபப்படுத்தாதீர்கள்.


மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!


3.  தெய்வீக தன்மை கொண்ட துளசி செடியை நட்டு, தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.


4.  புதன் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் துர்கை அம்மன் கோவிலுக்குச் சென்று பச்சை வளையல் சாற்றி வழிபடவும். முடிந்தால், 9 சிறுமிகளுக்கு பச்சை நிற ஆடைககளை பரிசளிக்கவும். இதனால் புதன் கிரகம் வலுவடையும்.


5. தினமும்  'ஓம் பும் புதாய நமஹ்' அல்லது 'ஓம் ப்ராம் பிரம் பிரவுன் எஸ்: புதாய நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதன் மூலம் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.


6. விநாயகர் கோவிலுக்கு சென்று, பாசி பயறை பச்சை துணியில் கட்டி முழு மனதுடன் அர்பணித்து விநாயகருக்கு பூஜை செய்தால் புதனின் அருள் கிடைக்கும்.


7. வீட்டின் பிரதான வாயிலில் தோரணத்தை கட்டி வைப்பதன் மூலம் புதனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் பிரச்சனைகள் அனைத்தும் விலகும் என்பதும் நம்பிக்கை.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ