விபரீத ராஜயோகம்: கிரகங்களின் ராசி மாற்றத்துடன் ஜோதிடத்தில், புதனும் சூரியனும் சேர்ந்து புதாதித்திய ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதே புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதற்கு முன் சூரியன் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். அதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாக்கப்பட்டது. இந்த ராஜயோகத்தின் பலன் 12 ராசிகளுக்கும் தெரியும். இருப்பினும், இந்த ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பதவி, கௌரவம், மரியாதை கூடி பொருட் சுக பலன் கிடைக்கும். எனவே அந்த ராசிகளை பற்று தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விபரீத ராஜயோகம் என்றால் என்ன
பொதுவாக விபரீத ராஜ யோகம் கொண்ட ஒருவர் தான் எந்த அளவுக்கு ஏழ்மையான நிலையில் இருந்தாலும், அவருக்கு நல்ல தசாபுத்தி சேர்ந்து வரும் போது அவருக்கு திடீரென அந்த விபரீத ராஜ யோகம் ஒரு பெரிய அரசனாக்கக்கூடிய அளவிற்கு மேன்மையைத் தரும். ராஜயோகம் என்பது ஒருவருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது ஏற்படுவதாகும். அதுவே விபரீத ராஜ யோகம் என்பது எதிர்பாராமல் நடப்பது. விபரீதம் என்றால் முற்றிலும் எதிர்பாராத நிலை எனலாம். இந்த விபரீத ராஜயோகம் என்பது முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் ஒருவரை அரசனாக்கும் அளவிற்கு உயர்த்தக்கூடியது எனலாம். அதாவது பெரியளவில் எந்த எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் சுலபமாக அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அந்தஸ்து அல்லது அரச பதவியை விபரீத ராஜயோகம் என குறிப்பிடப்படுகிறது.


மேலும் படிக்க | வக்ரமடையும் குரு: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்


விபரீத ராஜயோகத்திற்கான கிரக அமைப்பு
ஜோதிட சாஸ்த்திரத்தில் 6, 8, 12 ஆம் வீடுகளின் அதிபதி மற்ற இரண்டு வீடுகளில் ஏதேனும் ஒரு இடத்தில் அமரும் போது விபரீத ராஜயோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த விப்ரீத் ராஜயோகம் அவர்களின் ஜாதகத்தில் உருவாகும் போது அந்த நபர் மிகப்பெரிய வெற்றியை அனுபவிப்பார். 


இந்த மூன்று ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்


மேஷம்
இந்த ராஜயோகம் மேஷ ராசிக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. நீங்கள் சூரியனின் தாக்கத்தால் நன்மைகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் உண்டாகும். பயணங்களால் நன்மை உண்டாகும். சிக்கிய பணம் திரும்ப வரலாம். தொழிலதிபர்கள் கடனாக கொடுத்ததை திரும்ப பெறலாம். இது மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறலாம். முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.


மீதுனம்
மிதுன ராசியினருக்கு புதனின் பெயர்ச்சி குறிப்பிடத்தக்க பலன்களைத் தருகிறது. எழுத்து, பேச்சுத் துறையுடன் தொடர்புடையவர்கள் பத்ர ராஜயோகம் உருவாகி பலன் அடைவார்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். புதிய பொறுப்புக்கு செல்லலாம். இத்துடன் கௌரவம் கூடும். வியாபாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும்.


துலாம்
துலாம் ராசியினருக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் மற்றும் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். இத்துடன் ராஜயோகத்தால் பெருமையும் மரியாதையும் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணியை மக்கள் பாராட்டுவார்கள்.


மேலும் படிக்க | சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.. ஆடம்பர வாழ்க்கை, அமோக வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ