சனி பகவான்: நீதிக்கடவுளான சனி பகவான் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிக்கிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள். சனி பகவானை பார்த்தாலே பொதுவாக அனைவரும் அச்சப்படுவதுண்டு. ஏழரை நாட்டு சனி அல்லது சனி தசையால் பாதிக்கப்படுபவர்கள் வாழ்வில் கடுமையான சோதனைகளை அனுபவிக்கிறார்கள். அக்டோபர் 23 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர நிலையில் இருந்து தனது இயல்பான நிலைக்கு திரும்புகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் இந்த பாதை மாற்றம் காரணமாக, ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கத்தில் இருக்கும் ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். தற்போது சனி பகவான் மகர ராசியில் தங்கி வக்ர நிலையில் சஞ்சரித்து வருவதால் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். அடுத்த ஆண்டு ஜனவரி 2023 முதல் பல ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். எனினும், சில ராசிகளுக்கு இது தொடங்கும். சனியின் கோபத்திற்கு ஆளாகப்போகும் ராசிகள் எவை? எந்த ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்? பரிகாரம் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 


2023 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கம்


சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவுள்ள அதே வேளையில், சில ராசிகள் 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஏழரை நாட்டு சனியின் பிடியில் சிக்குவார்கள். தற்போது சனி மகர ராசியில் உள்ளார். 


மேலும் படிக்க | Jupiter Transit: இன்னும் ஒரு மாதத்திற்கு நிம்மதியாக இருந்துக் கொள்ளலாம்! அதன் பிறகு?? 


ஏழரை நாட்டு சனியின் தாக்கம் ஜனவரி முதல் தொடங்கும்


ஜனவரி முதல் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் சனி தசையின் தாக்கம் தொடங்கும். இந்த இரண்டின் காரணமாக இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலம். 


இந்த ராசிகளில் இருந்து 2023-ம் ஆண்டு சனியின் தாக்கம் நிறைவடையும் 


துலாம், மிதுன ராசிக்காரர்கள் மீதிருந்த சனி பகவானின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும். தனுசு ராசிக்காரர்களும் கடந்த ஏழு வருடங்களாக அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.


ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பரிகாரங்கள்


சனியின் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான செயல்களை செய்ய சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்யவும். எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்ற சனி பகவானுக்கு உகந்த பொருட்களை தானம் செய்யுங்கள். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பாத்திரத்தை எண்ணெயுடன் சனி பகவானின் கோவிலில் வைத்துவிட வேண்டும். சனீஸ்வரன் கோயில்களில் விளக்கு ஏற்றுவதும் நல்ல பலன் தரும். இது தவிர, பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் மற்றும் ஆஞ்சனேயரின் வழிபாடும் சனியின் கோபத்திலிருந்து விடுபட உதவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்க: பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ASTRO Traits: அனைவரையும் நேசிக்கும் கருணை மனம் படைத்த '3' ராசிகள்..!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ