Dream Astrology: கனவுகள் நம் மனநிலையை, மனதில் பொதிந்திருக்கும் ஆழமான எண்ணங்களையும் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் வாழ்க்கையில் நாம் அதிகம் நினைக்கும் விஷயங்களைப் பற்றிய கனவுகள் அடிக்கடி நமக்கு வருவதைக் காணலாம். பல சமயங்களில் நாம் விரும்பி சாப்பிடும் சில உணவுப் பொருட்களை சாப்பிடுவது போல் கனவு காண்கிறோம். அத்தகைய கனவுகளைப் பற்றி சாஸ்திரத்தில் என்ன மாதிரியான பலன்கள் கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லிக்காய் சாப்பிடுவது போல கனவு கண்டால் கிடைக்கும் பலன்கள்


உங்கள் கனவில் நெல்லிக்காய் சாப்பிடுவதைப் போல் கனவு கண்டால், பணம் வரவு காத்திருக்கிறது என்பது அர்த்தம். இதன் மூலம் உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேறப் போகிறது என்பதாகும். நீங்கள் கனவில் நெல்லிக்காயை பார்த்த நிலையில், அதை சாப்பிடாமல் இருந்தால், உங்கள் சில ஆசைகள் நிறைவேறாமல் போகலாம் என்று அர்த்தம்.


இஞ்சி சாப்பிடுவது போல கனவு கண்டால் கிடைக்கும் பலன்கள்


உங்கள் கனவில் இஞ்சி சாப்பிடுவது போல் காண்பது மிகவும் சுபமாக கருதப்படுகிறது. மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக இஞ்சி கருதப்படுகிறது. உங்கள் கனவில் நீங்கள் இஞ்சி சாப்பிடுவதைப் பார்ப்பது உங்கள் கவுரவத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


அன்னாசிப்பழம் சாப்பிடுவது போல கனவு கண்டால் கிடைக்கும் பலன்கள்


உங்கள் கனவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை போல் கனவு கண்டிருந்தால், ஆரம்பத்தில் எடுத்த வேலையில் சிரமப்படுவீர்கள் என்றாலும், பின்னர் அதே வேலையை எளிதாக செய்துவிடுவீர்கள் என்று அர்த்தம். அதோடு, அபரிமிதமான செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணம் இல்லை என்பதன் காரணமாக உங்கள் எந்த வேலையும் நின்று விடாது.


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... சனியின் அருளை பெற உதவும் நீலக்கல்..!!


ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல கனவு கண்டால் கிடைக்கும் பலன்கள்


ஐஸ்கிரீம் யாருக்குத்தான் பிடிக்காது? கனவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது என்பது உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கடந்து செல்லும் என்பதோடு அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும் என பொருள் படும்.


வாதுமை பருப்புகள் சாப்பிடுவது போல கனவு கண்டால் கிடைக்கும் பலன்கள்


வாதுமை பருப்பு மிகவும் மங்களகரமான உணவு பொருளாக கருதப்படுகிறது. கனவில் வாதுமை பருப்புகளைப் பார்ப்பதே, வாழ்க்கையில் வரவிருக்கும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. விரைவில் குழந்தையின் சிரிப்பு உங்கள் வீட்டில் எதிரொலிக்கக்கூடும் என்பதையும் இது குறிக்கலாம். திடீர் பண ஆதாயத்தைப் பற்றியும் கூறுகிறது.


ஓமம் சாப்பிடுவது போல் கணவு கண்டால்


ஓமம் சாப்பிடுவது போல் கனவு கண்டால், அது உங்கள் சிறந்த ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. இதனுடன், உங்களுக்கு விரைவில் எதிர்பாராத வகையில் நிதி ஆதாயம் கிடைக்கும். ஓமம் நல்ல செரிமானத்தை கொடுக்கும் உணவு. செரிமானம் நன்றாக இருந்தால் பல நோய்கள் உங்களைத் அண்டாமல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.


மாம்பழம் சாப்பிடுவது போல் கணவு கண்டால்


மாம்பழம் பகவான் ஸ்ரீராமரின் பிரசாதமாகக் கருதப்படுகிறது. எனவே கனவில் மாம்பழம் பார்ப்பது மங்களத்தை குறிக்கிறது. கனவில் மாம்பழம் சாப்பிடுவதைப் போல் காண்பது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கிறது. மகத்தான செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளது.


புளி சாப்பிடுவது போல் கணவு கண்டால்


பெண்ணின் கனவில் புளி தோன்றினால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே சமயம் ஆண்கள் கனவில் புளியைக் காண்பது நல்லதல்ல. ஆனால் பெண்கள் கனவில் புளியைக் சாப்பிட்டால் தங்கம், வெள்ளி, செல்வம் ஆகியவை கிடைக்க உள்ளது என்று பொருள்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | எண் ஜோதிடம்... 1 முதல் 9 வரை... ஆடி மாத எண்ணியல் பலன்கள் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ