புதன் கிரகம் நுண்ணறிவு, கல்வி, பகுத்தறிவு திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றுக்கான கிரகம் ஆகும். கன்னி மற்றும் மிதுன ராசிக்கான அதிபதியான புதன் தனது ராசியை மாற்றப் போகிறார். மார்ச் 31, 2023 அன்று மதியம் 02.44 மணிக்கு மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசியில் புதன் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்றாலும், சிலருக்கு இக்காலம் சவாலானதாக இருக்கும். புதன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்:


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் இரண்டாம் மற்றும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி. உங்கள் ஜாதகத்தில் புதனின் நிலை சாதகமாக இல்லாவிட்டால், இந்த சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இளைஞர்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், சில மோசமான போதை பழக்கத்திற்கு அடிமையாகலாம். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் பெயர் மற்றும் மரியாதை கூட பாதிக்கப்படலாம், எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.


கடகம்:


கடகம் உள்ளவர்கள் புதனின் சஞ்சாரத்தால் பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சில கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் நற்பெயரும் கெடலாம். கடக ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கலாம், அதனால் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். இந்த நேரத்தில், உங்கள் வேலையை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. செவ்வாய் கிரகத்தின் பாதகமான நிலை காரணமாக, உங்கள் நிலை அல்லது நற்பெயர் கூட கேள்விக்குறியாகலாம். இந்த நேரம் உங்களுக்கு கடினமாக இருக்கும்.


மேலும் படிக்க | எச்சரிக்கை! 2025 மார்ச் வரை சனியின் பிடியில் சிக்கித் தவிக்க போகும் ‘ராசி’ இது தான்!


கன்னி:


கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை இந்தக் காலகட்டத்தில் மோசமடையலாம். நீங்கள் வேலையை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த நேரத்தில் நிறுத்திவிட்டு சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டும். பணியிடத்தில் தேவையற்ற வதந்திகளில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் உங்கள் இமேஜ் கெட்டுவிடும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இந்த நேரத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும், குறிப்பாக சொந்த தொழில் வைத்திருப்பவர்கள், ஏனெனில் புதனின் நிலை ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால், நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.


கும்பம்:


இந்த புதனின் சஞ்சாரத்தால், உங்கள் இளைய உடன்பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜாதகத்தில் புதனின் நிலை சாதகமற்றதாக இருந்தால், உங்களுக்கு சிரமங்கள் மேலும் அதிகரிக்கலாம். புதிய திட்டத்தில் தாமதம் ஏற்படலாம். புதனின் எழுச்சி கும்ப ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சவாலாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வகையான பெரிய அல்லது அபாயகரமான முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். சொந்த தொழில் செய்பவர்களும் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ