சனி பகவானின் நிலை மாற்றம் 2022: சனி பகவான் நீதியின் கடவுள் என்பதால் ஜோதிடத்தில் அவருக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி கர்மவினைக்கு ஏற்ப பலன்களை கொடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் மனிதர்களின் விதியை மாற்றுகிறார். சனி ஒரு அரசனை ஆண்டியாகவும், ஒரு எளிய ஏழையை அரசனாகவும் மாற்றும் வல்லமை கொண்டவர். அக்டோபர் 23, 2022 அன்று சனி பகவானின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படப் போகிறது. சனி தற்போது தனது சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில் உள்ளார். அக்டோபர் 23 ஆம் தேதி முதல் அவர் தனது நிலையை இயல்பு நிலைக்கு மாற்றவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் நிலை மாற்றம் 3 ராசிகளில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கவுள்ளது. இது மிகவும் சுபமானதாகும். இந்த மகாபுருஷ ராஜ யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு பண பலத்தையும் முன்னேற்றத்தையும் தரும். அதிகப்படியான வெற்றிகளை அள்ளித்தரும்.


சனி பகவானின் நிலை மாற்றம் மேஷம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் விதியை மாற்றும்:


மேஷம்: 


மகர ராசியில் சனிபகவான் இயல்பு நிலையில் சஞ்சரிக்கவுள்ளதால், மேஷ ராசியில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகும். இதனால் இவர்கள் தொழில், பண ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். பணி இடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு அதிகரிக்கும். இந்த காலத்தில் புதிய பணிகளை தொடங்கலாம். உங்கள் பணியால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.


மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் குரு; ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் வரை பொற்காலம்! 


தனுசு:


தனுசு ராசிக்காரர்களுக்கு மார்கி சனியின் இந்த இயக்கம் சுப பலன்களைத் தரும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழிலில் முன்னேற்றம் இப்போது ஏற்படும். அலுவலக பணிகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு பணி இடத்தில், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.


மீனம்: 


ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகுந்த பலன்களை அளிக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வருமானம் பெருகுவதால் மகிழ்ச்சி அதிகரித்து நிம்மதி கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். வியாபாரத்தை அதிகரிக்க புதிய தொடர்புகள் உதவும். இந்த நேரத்தில் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 


குடும்பத்தில் அமைதி நிலவும், மகிழ்ச்சி பொங்கும். கணவன் / மனைவி, குழந்தை இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் தாக்கத்தால் வலுப்பெறும் ராகு: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ