இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய செல்வம். கல்வி செல்வம் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைத்து விட்டால், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளையும் எளிதாக பெற்று விடுவார்கள்.  திறமை காரணமாக வாழ்க்கையை ஜெயித்து விடுவார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே தான் அரும்பாடு பட்டாவது அதை நம் பிள்ளைகளுக்கு தர வேண்டும் என்று பெற்றோர்கள் போராடுகிறார்கள்.குழைந்தைகளுக்கு கல்வி பரிபூரணமாக கிடைக்க புதன் கிரகத்தின் அனுகிரகம் மிகவும் முக்கியம். புதன் கிரகத்தின் அனுகிரகம் முழுவதுமாக பெற அவருக்கு பிடித்த நிறமான பச்சை நிறத்தை அதிக அளவில் பயன்படுத்துவது பெரிய அளவில் நன்மையை தரும். புதன்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சிறிதளவு பச்சை பயிரை எடுத்து பச்சை நிற துணியில் மூட்டையாக கட்டி விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வணங்க வர படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். விநாயகர் கோவிலில்  பாசி பயறை பச்சை துணியில் கட்டி முழு மனதுடன் அர்பணித்து பூஜை செய்தால் புதனின் அருள் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதன்


நவகிரகங்களில் அறிவாற்றல், புத்தி கூர்மை, சுறுசுறுப்பு, படிப்புதிறன் ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பவர் புதன் பகவான் ஆவார் புதன் கிரகம் வலுப்பெற புதன்கிழமையன்று பசுவிற்கு பசுந்தீவனம் கொடுக்கவும் அல்லது தானம் செய்யவும். மேலும், புதன்கிழமை துளசி செடியை நட்டு, தினமும் பூஜை செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். புதன்கிழமை அன்று துர்கா அம்மன் கோவிலுக்குச் சென்று பச்சை வளையல் அணிவிக்கவும். முடிந்தால், 9 சிறுமிகளுக்கு பச்சை நிற ஆடைகள் அல்லது கைக்குட்டைகளை பரிசளிக்கவும். மேலும், புதன்கிழமையன்று 'ஓம் பும் புதாய நமஹ்' அல்லது 'ஓம் ப்ராம் பிரம் பிரவுன் எஸ்: புதாய நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.


மேலும் படிக்க | Guru Vakra Peyarchi: குருவின் வக்ரப் பெயர்சியால் திண்டாடப்போகும் 4 ராசிகள்! சூதானம் அவசியம்


கேதுவுக்கான பரிகாரம்


சில குழந்தைகளுக்கு படிப்பு சரியாக வராமல் இருக்கலாம்.  கிரகநிலை மாற்றங்கள் இதற்கு ஒரு பெரும் காரணமாக சொல்லப்படுகிறது.  அந்த வகையில் கேது பகவானுடைய கோளாறுகள் தான் படிப்பில் மந்த நிலைக்கான முக்கிய காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.கேது பகவானுக்கு உகந்த தானியம் கொள்ளு. ஞாயிற்றுக்கிழமை கேது பகவானுக்கு உகந்த நாள் ஆகையால் அந்த நாளில் கேதுவுக்கு கொள்ளை படைத்து பரிகாரத்தை செய்வது சிறப்பு.


படிப்பதற்காக அமரும் திசை


மாணவர்கள் படிக்கும் போது தங்கள் முகத்தை எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். மேலும் இந்த ஆற்றலுடன் மனம் படிப்பில் ஈடுபட தொடங்குகிறது. படிப்பதற்கு முன், வடக்கு திசையை நோக்கி ஐந்து நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.


படிக்கும் அறை


படிக்கும் போது, ​​நேரடியாக காற்று வரும் ஜன்னல் அல்லது கதவுக்கு முன்னால் உட்கார வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கதவு மற்றும் ஜன்னலில் இருந்து வரும் நேரடி காற்றின் வேகம் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும். உங்கள் மனம் படிப்பிலிருந்து விலகி அலையும். அதே போல் குழந்தைகள் படிக்கும் அறையில் பச்சை நிறம் இருப்பது அவசியம். அதற்கு ஏதாவது சிறிய வகை செடிகளை அந்த அறையில் வைத்து வளர்க்கலாம். அது மட்டும் இன்றி குழந்தைகள் படிக்கும் அறையில் சரஸ்வதி தாயாரின் படத்தை வைத்து தினமும் படிக்க தொடங்கும் அவர்களை வணங்கி விட்டு காயத்ரி மந்திரத்தை சொல்லிய பிறகு படிக்க குழந்தைகளுக்கு பழக்கத்தை ஏற்படுத்தவும்.


படிக்கும் நேரம்


தற்போது குழந்தைகள் பெரும்பாலும் இரவில் படிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதைச் செய்வதன் மூலம் உங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டு, நினைவு திறன் குறைவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பிரம்ம முஹூர்த்த நேரம் படிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. மனது புத்துணர்ச்சியுடன் இருப்பதால், இந்த நேரத்தில் எழுந்த பிறகு செய்யப்படும் பணிகள், நீண்ட நேரம் மனதில் இருக்கும். ஏனென்றால் மூளையின் நினைவக அமைப்பு காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நாளை உருவாகும் அபூர்வ யோகம்: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ