அனைத்து துக்கங்களையும் கஷ்டங்களையும் போக்கும் இறைவழிபாட்டில் முக்கியமான மாதமான இந்த ஆடி மாதத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலனளிக்கப் போகிறது. குருவும் சந்திரனும் இணைவதால் ஏற்படும் கஜகேசரி யோகம் ஜூலை 29ஆம் தேதி உருவாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான், கேந்திரத்தில் இருக்கும் போது, அதாவது லக்னம் அல்லது சந்திரனின் நிலையிலிருந்து முதல், நான்காவது, ஏழாவது மற்றும் பத்தாம் வீடுகளில் இருக்கும்போதெல்லாம் கஜகேசரி யோகம் ஏற்படும். கஜம் என்றால் யானை, இது புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் குறிக்கிறது. கேசரி என்பது சிங்கத்தின் பெயர். வரம்பற்ற சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கும் சிங்கம். இந்த இரண்டையும் சேர்த்து, புத்திசாலித்தனமும் அபார சக்தியையும் நற்பலன்களையும் கொடுக்கும் என்பதால் இந்த யோகத்திற்கு கஜகேசரி யோகம் என்று பெயர். 


கஜகேசரி யோகம் 
ஜோதிட சாஸ்திரத்தில் கஜகேசரி யோகம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்துடன் கஜகேசரி யோகம் ஜூலை 29ம் தேதி உருவாகிறது. திரிகிரஹி யோகமும் உருவாகிறது. அந்த வகையில் ஜூலை 29ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.


மேலும் படிக்க | சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!


குருவும் சந்திரனும் இணையும் கிரகங்களின் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதையும், இந்த அற்புதமான யோகத்தின் பலன்களை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகளை தெரிந்துக் கொள்வொம்.


மேஷம்
ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் கஜகேசரி மற்றும் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இதனால், மேஷ ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். சிவனின் அருளால் நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த பிரச்சனைகள் விரைவில் தீரும். அதே சமயம், பணியிடத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் பெறலாம். இதுவரை கிடைக்காத உங்கள் திறமைக்கு  பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கலாம். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடுவதுடன் மரியாதையும் அதிகரிக்கும்.


ரிஷபம்


ரிஷப ராசியில் உருவாகும் கஜகேசரி யோகம், இந்த ராசிக்காரர்களுக்கு அருமையானதாக இருக்கும். இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும். பணியிட மாற்றம் குதூகலத்தைக் கொடுக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான காலம் இது. வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.  


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் நன்மைக் கொடுக்கும். மகத்தான நேரமாக இருக்கும் இந்த நேரத்தில், திடீர் பணவரத்து, எதிர்பாராமல் வரும் அதிர்ஷ்டங்கள் உங்களை வாழ்க்கையை உயர்த்தும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும் காலம் இது. சமூகத்தில் மரியாதை கூடும். ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும், கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும்.  வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆடியில் ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் சிவனுக்கு காவடி! கங்கை நீரால் அபிஷேகம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ