புதன் பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலம் கணக்கிடப்படுகிறது. இந்த கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். மார்ச் 16, 2023 அன்று, கிரகங்களின் இளவரசனான புதன் பெயர்ச்சியாகி மீனத்தில் நுழைந்தார். புதன் செல்வம், புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சாற்றல் போன்றவற்றிற்கு காரணியான கிரகமாக விளங்குகிறார். தற்போது புதன் கிரகம் தனது நீச்ச ராசியான மீனத்தில் நுழைந்து நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீச்சபங்க ராஜயோகம் அனைத்து ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், தொழில்-வியாபாரம் மற்றும் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 12 ராசிக்காரர்களில் 3 ராசிக்காரர்களுக்கு அமோகமான ராஜயோகம் கிடைக்கும். இந்த நீச்ச ராஜயோகம் இவர்களுக்கு மிக நல்ல பலன்களைத் தரும். மீன ராசியில் புதனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதீத நற்பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 


புதன் பெயர்ச்சியால் உண்டாகும் முன்னேற்றம், பண வரவு


ரிஷபம்: 


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம் அனுகூலமான பலன்களைத் தரும். இந்த ராசிக்கார்ரகள் பெரிய அளவிலான நிதி நன்மைகளைப் பெறுவார்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இதனால் வருமானமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணம் செல்ல வயப்பு கிடைக்கும். இந்த பயணத்தால் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.


மேலும் படிக்க | Guru Asta: குரு அஸ்தமனம் இந்த 6 ராசிகளுக்கும் மோசமான காலகட்டம்!


மகரம்: 


புதனின் ராசி மாற்றத்தால் உருவாகும் நீச்ச ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு வலுவான பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் இவர்கள் மீது கனிவாக இருக்கும். ஆகையால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். இது வியாபாரத்திற்கு நல்ல நேரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தைரியமும், வீரமும் பெருகும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.


கும்பம்: 


புதனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருந்தாலும், புதன் சஞ்சாரம் சிறிது காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதியைத் தரப் போகிறது. தன் பேச்சின் பலத்தால் பல நன்மைகளை பெறுவார்கள். நீண்ட நாட்களாக இவர்களுக்கு இருந்துவந்த பெரிய ஆசைகள் நிறைவேறும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ