பிப்ரவரி மாதம் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம்: வேத ஜோதிடத்தின் படி, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று கிரகங்களின் இளவரசனான புதன் பெயர்ச்சி அடைந்து மகர ராசியில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து இந்த மாதம் சுக்கிரன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட பெரிய கிரகங்களும் பெயர்ச்சி அடையப் போகின்றனர். அந்த வகையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி 2024 அன்று, செல்வத்தையும் செழிப்பையும் தரும் சுக்கிரன் கிரகம் மகர ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியின் காரணமாக மகர ராசியில் புதன் சுக்கிரன் சேர்க்கை ஏற்படக்கூடும். இதனால் மகர ராசியில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். ஜோதிடத்தின் படி, புதன் கிரகமானது புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தின் காரணியாக கருதப்படுகிறார், மறுபுறம் சுக்கிரன் கிரகம் செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் காரணியாக கருதப்படுகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு சுப கிரங்களின் சேர்க்கையால சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கலைப் பெறுவார்கள். இந்நிலையில் பிப்ரவரி மாதம் உருவாகவிருக்கும் லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் (Aries Zodiac Sign): மகர ராசியில் நடக்கவிருக்கும் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமானத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் பணிப்புரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி அந்தஸ்து உயரும். முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை நீங்கள் ஈட்டலாம். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாகவும் வலுவாக இருக்கும்.


மிதுனம் (Gemini Zodiac Sign): புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகப் போகும் லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். நீங்கள் இந்த நேரத்தில் செல்வச் செழிப்புடன் இருப்பர்கள். திடீர் பண ஆதாயத்தை நீங்கள் பெறுவீர்கல். அதுமட்டுமின்றி தொழிலில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். புதிய தொழில் தொடங்க நினைக்கும் மிதுன ராசியினருக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.


மேலும் படிக்க | மகரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, பண வரவு


கன்னி (Virgo Zodiac Sign): வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகப் போகும் லக்ஷ்மி நாராயண யோகம் கன்னி ராசியினருக்கு மிகவும் நன்மை பலன்களைத் தரும். கன்னி ராசிக்காரர்களுக்கு பண வரவு, பண மழை பொழியும். நீண்ட நாட்களாக அவதிப்பட்ட நோயிலிருந்து ஒரேடியாக விடுபடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவும் வலுவாக இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். மூத்த உடன்பிறப்பிடமிருந்து உங்களுக்கு பிடித்த பரிசைப் பெறலாம். பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். உங்களுக்கு புதிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ