ஏழரை சனி மற்றும் சனி திசையின் தாக்கம் 2023: வேத ஜோதிடத்தின்படி, கோள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உச்சம் மற்றும் நீச்சம் அடையும். இது மனித வாழ்விலும் பூமியிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கர்மாவைக் கொடுப்பவரான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் சில ராசிக்காரர்களில் ஏழரை சனி மற்றும் சனி திசையின் தாக்கம் ஏற்பட்டு அசுப பலன்கள் தரத் தொடங்கியுள்ளன. அதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எனவே இவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையின் அசுப பலன் இருக்கும்
ஜோதிடத்தின்படி, கும்ப ராசியில் சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடைந்ததால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திசையின் தாக்கத் தொடங்கியது. சனிபகவான் கடக ராசிக்காரர்களின் பெயர்ச்சியாக எட்டாம் வீட்டிலும், விருச்சிக ராசிக்காரர்களின் பெயர்ச்சி நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்காது. கடினமாக உழைத்தாலும் குறைவான பலனே கிடைக்கும். மேலும், முக்கியமான வேலைகள் இந்த நேரத்தில் நிறுத்தப்படலாம். மறுபுறம், இந்த நேரத்தில் போட்டி தேர்வில் பங்கேற்றக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்காது. மேலும் இந்த நேரத்தில் தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | ஜூலை மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை... முழு ராசிபலன் இதோ


இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் அசுப பலன் இருக்கும்
சனிபகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடந்ததால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இரண்டாம் கட்ட ஏழரை சனி கும்ப ராசியிலும், மூன்றாம் கட்ட ஏழரை சனி மகர ராசியிலும் தொடங்கியுள்ளது. அதனால்தான் இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக திருப்தி அடைய மாட்டார்கள். நிதி நெருக்கடி ஏற்படும். இதனுடன், நோய்கள் அவ்வப்போது இந்தக ராசிக்காரர்களைச் சூழ்ந்து கொள்ளலாம். மேலும், இந்த ராசிக்காரர்களின் பணம் எங்காவது சிக்கிக் கொள்ளலாம். இதனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் விபத்துக்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும். 


சனிபகவான் கஷ்டத்தில் இருந்த தப்பிக்க பரிக்காரத்தை செய்யுங்கள்


1- சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று, சனி சிலையின் முன் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும். சனி சாலிசாவையும் பாராயணம் செய்யவும்.
2- ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலமரத்தின் கீழ் எண்ணெய் தீபம் ஏற்றினால், சனி பகவான் மகிழ்ச்சியடைவார்.
3- சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு போர்வைகள், கடுகு எண்ணெய் மற்றும் உளுந்து போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
4- ஓம் ஷன் நோ தேவிராபிஷ்டாய அபோ பவந்து என்ற சனியின் இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க வேண்டும்.
5- ஏழரை சனி மட்டும் சனி தீசை இருக்கு ம் போது இறைச்சி சாப்பிட வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் உச்சத்தில்... வாழ்வில் முன்னேற வாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ