குரு வக்ர பெயர்ச்சி 2022: குரு பகவான் திருமணம், குழந்தைப்பேறு, நல்ல வேலை ஆகியவற்றை அருளும் கிரகம். குரு பலன் வந்து விட்டாலே அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறுவார்கள். ஜாதகத்தில் வியாழனின் நிலை சுபமாக இருந்தால், அந்த நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும், வேலையிலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டே இருப்பார். குருபகவான் இப்போது மீன ராசியில் உள்ள நிலையில், இந்த மாத இறுதியில் வக்ர கதியில் பெயர்ச்சி ஆகிறார். குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அதிசயங்கள் ஏற்படப்போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிவு, கல்வி மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் கிரகமாக குரு கருதப்படும் நிலையில், குரு சுபமாக இருக்கும்போது அதிர்ஷ்ட காற்று பலமாக் வீசும். வியாழன் பெயர்ச்சி மற்றும் வியாழனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


தற்போது, ​​வியாழன் மீனத்தில் சொந்த ராசியில் இருக்கிறார், வரும் 29 ஜூலை 2022 முதல், அவர் மீனத்திலேயே வக்ர நிலையில் செல்கிறார். குரு வக்ர பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதித்தாலும், 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பலன்களை அள்ளித் தருவார். 


மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர நிலையில் நுழையும் புதன்; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்


ரிஷபம்:


மீனத்தில் வியாழன் வக்ர நிலையில் செல்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் இருக்கும். வியாபாரிகள் நிறைய லாபம் அடைவார்கள். லாபம் அதிகரிக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.


மிதுனம்:


வியாழனின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கும் சிறந்த பலனைத் தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தினால் பெரும் லாபம் அடையலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த பெயர்ச்சி காலம் அவரது வலுவான எதிர்காலத்தின் அடித்தளமாக இருக்கும்.


கடகம்:


கடக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி காலத்தில், குரு பலன்களைத் தருவார். தனது ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணங்களும் நன்மை தரும். குறிப்பாக இந்த பயணங்களால் தொழிலதிபர்கள் அதிகம் பயனடைவார்கள். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் தொடங்கும். முன்னேற்ற பாதையில் செல்லத் தொடங்குவீர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் எல்லா வகையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR