ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றுவது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை மாதத்திலும் பல கோள்கள் வக்ர நிலையில் இடம் மாற்றிக் கொள்ளப் போகின்றன. இதில் வியாழனும் அடங்கும். வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தில் ஜூலை 29 ஆம் தேதி வக்ர நிலையில் பிரவேசிக்க உள்ளது. வியாழம் கிரகம் வக்ர நிலையில் நிலையில் பிரவேசிக்கும் குரு வக்ர பெயர்ச்சியின் போது, ​​குறிப்பாக சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள்.


குரு பகவான் அதாவது வியாழன் கிரகம் அறிவு, வளர்ச்சி, கல்வி, குழந்தைகள், தொண்டு மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், குரு வக்ர பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு நிறைய பண ஆதாயங்களை கொண்டு வரும்.


மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர நிலையில் நுழையும் புதன்; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்


ரிஷபம்


வியாழன் கிரகம் ரிஷபத்தின் 11 வது வீட்டில் vஅக்ர நிலையில் நுழையப் போகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. வியாழனின் வக்ர நிலையிலான, இந்த ராசிக்காரர்களின் வருமானம் கூடும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். வியாபாரிகளுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பெயர்ச்சி காலத்தின் போது, மிஅக் முக்கிய ஒப்பந்தம் ஒன்று நிறைவேறலாம். உங்கள் ஜாதகத்தில் 8 ஆம் வீட்டின் அதிபதி வியாழன் என்று சொல்லலாம். எனவே, ஆராய்ச்சித் துறையுடன் தொடர்புடையவர்களின் காலம் நன்றாகவே இருக்கும்.


மிதுனம்


வியாழன் இந்த ராசியின் பத்தாம் வீட்டில் வக்ர நிலையில் நுழைகிறது. இந்த வீடு வேலை, வணிகம் மற்றும் பணியிடமாக கருதப்படுகிறது. பிற்போக்கு காலத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அல்லது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.தொழில் செய்பவர்களுக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். மார்க்கெட்டிங், மீடியா, பிலிம் லைன், பேங்கிங் போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். அதே சமயம் மிதுன ராசியை புதன் கிரகம் ஆள்கிறது. புதனுக்கும் வியாழனுக்கும் இடையிலான நட்பு உணர்வின் காரணமாக இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 


கடகம்


வியாழன் இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் இருக்க போகிறார். அவை அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணம் தொடர்பான வீடாக கருதப்படுகின்றன. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் முழு ஆதரவைப் பெறும். குரு பெயர்ச்சி காலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்களால் நன்மை உண்டாகும். வெளிநாட்டில் தொழில் செய்பவர்களும் நல்ல பணம் சம்பாதிக்கலாம். அதே நேரத்தில், உணவு, ஹோட்டல்கள், உணவகங்களுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR