Lord Ganesh Blessings: முழு முதல் கடவுள் என இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் விநாயகப் பெருமான். எந்த விதமான சுப காரியங்கள் அல்லது எந்த ஒரு மங்களகரமான அல்லது சமயச் சடங்குகளைச் செய்தாலும், முதலில், விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே அனைத்து நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. தெய்வங்களிலும் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. விநாயகப் பெருமானை வழிபடுவதால், அனைத்து வகையான காரியங்களும் தடையின்றி வெற்றியடைவதோடு, அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கணபதியை வழிபடுவதால் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும். புதன் கிழமை விநாயகப் பெருமானுக்கு உகந்த நாள் என்றால், ஜோதிடத்தில் விநாயகப் பெருமானுக்கும் பிடித்த ராசிகள் என்று சில ராசிகள் குறிப்பிடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞானம் மற்றும் செழிப்புக்கான கிரகமான புதன், விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது. ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்களுக்கு விநாயகப் பெருமானின் சிறப்பு அருள் உண்டு. விநாயகப் பெருமானின் சிறப்பு அருளைப் பெறும் ராசிகள் இவை...


மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்


மகரம் - ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசிக்காரர்களுக்கு விநாயகப் பெருமானின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். மகர ராசிக்காரர்கள் சுதந்திரமான சிந்தனையும், கடின உழைப்பும் உடையவர்கள். விநாயகருக்கும், சனி தேவருக்கும் பிடித்தமான ராசி மகரம் ஆகும்.


தற்போது விநாயகர் சதுர்த்தி வரவிருக்கும் நிலையில், மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் விரைவில் வரும். செய்யும் செயல்களில் ஓரளவு முயற்சி எடுத்தாலே சிறப்பான முடிவுகளை கொடுப்பார் கணபதி. இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையின் பலத்தால் மிகப்பெரிய சவால்களைச் சமாளிப்பதில் வல்லவர்கள். மகர ராசிக்காரர்கள் மீது விநாயகப் பெருமானின் சிறப்பு அருளால் பணிகளில் தடைகள் குறையும்.


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
   
மேஷம் - விநாயகப் பெருமானின் சிறப்பு அருளும் ஆசியும் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்போதும் நிலைத்திருக்கும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம். செவ்வாய் தைரியம், வலிமை, வீரம், விவேகம் ஆகியவற்றுக்கு காரண கர்த்தா ஆவார். விநாயகப் பெருமானின் சிறப்பு அருளால் இந்த ராசிக்காரர்களின் அனைத்து வேலைகளும் விரைவில் முடிந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  
மிதுனம்
- மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஜோதிடத்தில், புதன் கிரகம் வணிகம், கணிதம், தர்க்கம், தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. சிவனின் மகனான விநாயகப் பெருமான், இந்த ராசிக்காரர்கள் மீது கருணை கொண்டவர். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மீது விநாயகப் பெருமானின் சிறப்பு அருள் என்றும் உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகப் பெருமானின் ஆசிர்வாதத்தால், காரியங்கள் விரைவில் முடிவடைந்து, நினைத்த பலன் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ