Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

தனுசு, மகரம், கும்பம், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை செய்து வந்தால்,  சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2022, 06:04 PM IST
  • ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
  • அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
  • சனியின் வக்ர பார்வையில் இருந்து நிவாரணம் தரும்.
Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள் title=

சனி நீதியின் கடவுள் என்பதால், இந்த நேரத்தில் மக்கள் தவறான செயல்களைச் செய்தால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். சில ராசிகளுக்கு ஏழை நாட்டு சனி அல்லது சனி திசை நடக்கிறது. இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும்  மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். இந்நிலையில், சில ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.

தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாடு சனியும், மிதுனம், துலாம் ராசியில் சனி திசையும் நடக்கிறது. இந்த  ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை செய்து வந்தால்,  சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
 
சனிபகவானின் அருளைப் பெறவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும், ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது  ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் பாதிப்புகளை தவிர்க்கவும், மேற்கொள்ள வேண்டிய சில பரிகாரங்கள்: 

அமாவாசை அன்று  நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும். அதிலும் சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை இந்த பரிகாரத்திற்கு மிகவும் சிறந்தது.

ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும்.

சனி பகவானின் சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

சனி அமாவாசை அன்று வீட்டில் சனி யந்திரத்தை நிறுவ மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது. இதனுடன் தினமும் வழிபடுவதால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பணவரவு உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News