2023ம் ஆண்டில், பல முக்கிய மற்றும் சிறிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றப் போகின்றன. இந்த கிரகங்களின் பெயர்ச்சி பல ராஜயோகங்களை உருவாக்கும். இது வெவ்வேறு ராசிகளுக்கு நன்மை பயக்கும். 2023, பிப்ரவரி 15, அன்று, சுக்கிரன் உச்ச ராசியான மீனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் மாளவ்ய ராஜயோகம் ஏற்படுகிறது. இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். இது தவிர, அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமானது. அத்தகைய அதிர்ஷ்டமான ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனம்


பிப்ரவரி மாதம் உருவாகும் மாளவ்ய யோகம் மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். அதிலும் இந்த ராஜயோகம் மீன ராசியில் உருவாகப் போகிறது, இது உங்கள் வேலை பாணியில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். திருமணமாகாதவர்களுக்கு இந்த நேரத்தில் உறவுகளை கை கூடி திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் ஒருவருடன் கூட்டு சேர்ந்து பணியாற்ற நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும், வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


கும்பம்


மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த நேரத்தில், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். தற்செயலாக பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி, இக்காலத்தில் தொழிலதிபர்கள் வியாபாரத்தில் பல லாப வாய்ப்புகளைப் பெறலாம். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இணக்கம் ஏற்படும். மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். மறுபுறம், நீங்கள் கடனால் மூழ்கியிருந்தால், அதிலிருந்து வெளியேற வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும்.


மேலும் படிக்க | குபேரரின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: 2023-ல் செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்


ரிஷபம்


இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இவ்வாறான நிலையில் இக்காலப்பகுதியில் சிறந்த தொழில் வாய்ப்புகளை காணமுடியும். இந்த காலகட்டத்தில் வணிகத்தில் உள்ளவர்களும் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. எந்த திட்டத்திலும் வெற்றியை அடைவார்கள். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சொத்து அல்லது வாகனம் வாங்கலாம். மறுபுறம், நீங்கள் ஒருவருடன் கூட்டு சேர்ந்து வேலை செய்ய நினைத்தால், இந்த நேரம் சரியானதாக இருக்கும்.


மேலும் படிக்க | யுத்தம், பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகம் மீளுமா.. 2023 எப்படி இருக்கும்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மகரத்தில் சுக்கிரன்! '5' ராசிகளின் அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ